உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்,
நடப்பவை நாடகமென்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்.
15 notes
·
View notes
கற்பனை ஒரு கிருக்கல் 4
இந்த உலகத்திற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சுவையாக வானத்தில் பறக்க ஆசைப்பட்டேன் ரோட்டில் ஓட ஆசைப்பட்டேன் புதுசா ஒன்றை கண்டுபிடிக்க ஆசைப்பட்டேன் வண்ணத்துப்பூச்சியின் பின்னே நடந்தேன் பலவண்ணத்துப் பூச்சியை கண்டேன் செய்தி எழுதுனேன் முதல் பக்கத்தில் விண்ணுக்கு சென்றாலும் அழைத்து செல்வேன் தரைக்கு வந்தாலும் அழைத்து வருவேன் மறுக்கா மறுக்கா சொல்லு முடியாது அபூர்வம் வண்ணத்துப்பூச்சியின் அழகினிலே இன்ப மகிழ்ச்சி வந்து பாயுது மனதினிலே ஓஹோ கவிதை சுட்ட கவிதை என்ன வண்ணத்துப்பூச்சிக்கு புரிஞ்சுதா உன் கவிதை சீக்கிரம் புரியும் எதோ ஒரு வார்த்தை என் மனதில் நினைக்க உலகம் பட்டாம்பூச்சியின் கூட்டை அழிக்க மனம்கதறினவனாய் மறுபடியும் செய்தி எழுதுனேன் முதல் பக்கத்தில் கட்டிடத்துக்காக வண்ணத்து பூச்சியின் கூட்டை அழித்தவர்களை நீங்கள் நலமா மறுபடியும் வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன் மனம் மயங்கினேன் திசை தெரியாமல் ஓடினேன் கற்பனையில் மிதந்தேன் வீட்டுக்குள் பட்டாம்பூச்சி உலகம் அமைத்தேன் உலகத்துக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன் மெல்ல மெல்ல நாட்கள் நகர்ந்தன பத்திரிகையின் முதல் பக்கத்தைவிட்டு வைத்துவிட்டேன் காலம்முழுவதும் பட்டாம்பூச்சிக்காக இயற்கையின் காவலன் இயற்கையின் நாயகன் இயற்கையை கவனி இயற்கையை ரசி போதும் போதும் பெருசா போகுது ஆஹா என்ன ஒரு அதிசய மனிதன் பாருங்கள்
கற்பனை ஒரு கிருக்கல் தொடரும்…
16 notes
·
View notes
என் பாதங்கள் உன் சாலையை சேர்ந்த போது, என் பயணம் நம் பயணம் என்றான போது, என் கவி வரிகள் உனக்கென்றான போது, என் புகைப்படங்களில் உன் உருவமும் சேர்ந்த போது.....என் வெறுமையின் கனம் கரைந்து தான் போனது. ♥︎
6 notes
·
View notes
எழும்பூர் அருங்காட்சியகம்
மறையும் கதிரவன் தங்க ஒளி, மரங்களில் வீச, அருங்காட்சியகம் அடர்ந்து நிற்க, மதில் சுவரின் வெளியே இருந்து பார்த்த என்னுள் தான் எவ்வளவு எண்ண அலைகள், மெல்லிய காற்றாக வருடியது. மீண்டும் ஒரு முறை அதன் உள்ளே சென்று, ஓவிய சிற்ப கூடங்களில் மீண்டும் என்னை மறக்க அழைத்தது போல் தோன்றிற்று.
இசுடான்லியில் இருந்த ஒரு மாத காலம் மனம் விரும்பியபோதும், வேண்டிய போதெல்லாம் பிராட்வேயில் இருந்து ஒரு பேருந்து, எழும்பூர் வந்தடைவேன், உள்ளே அருங்காட்சியாகத்தில் ஒரு மோர் அருந்திவிட்டு, என்னைத் தொலைக்க தொடங்குவேன், ரவிவர்மன் ஓவியங்களிலும், வெண்கல சிற்பங்களிலும், நடராஜர் நடனத்திலும், யானை, திமிங்கலம் எலும்புகளிலும், சிறிது நேரம், புத்தர் கூடத்தில் வழி மறப்பது, மூக்கறுக்க பட்ட சிற்பங்களில் முன் என்னை மறப்பது.
அவனுடனும் அவளுடனும் ஒரு நாள் என என் தனிமை, நட்பு, காதல் என அனைத்திற்க்கும் சாட்சியாக உள்ளே இருக்கும் பாறைகளும், படங்களும் எண்ண அலைகளாக கரை தீண்டின, மீண்டும் ஒரு நாள் உள்ள செல்ல தூண்டின, கடந்த கால தருணங்களை கரை சேர்த்து சென்றன.
இந்த காலம் தான் எவ்வளவு விசித்திரமானது ஏதோ நேற்று நடந்தார் போல் தோன்றியது இன்றும் நினைவில் உள்ளது, அவர்கள் உடையின் நிறம் அவள் தனது அம்மாவிடம் சண்டையிட்டதாக கூறியதும், கம்பளம் மறைத்த கண்ணாடியில் மூவரும் எடுத்த செல்ஃபி.
இவ்வளவும் ஒரு சில வினாடி பொழுதில் என் கண் முன்னே, கரை தொட வந்தன.
இவ்வளவும் அந்த ஒரு படம் நான் இன்று எடுத்ததில் அடங்கியதாயிற்று.
- தேவி
4 notes
·
View notes
அசையாமை
ஓடும் நீர் புரட்டி வந்த துகளாக
நெடுந்தூரமாய் நிற்காத பயணம்.
நீர் நில்லாத பயணி.
அதை நிற்கச்சொல்லிப்பார்த்தேன்
அழகிய வனங்களைப்பார்க்கும் போதெல்லாம்.
நீர் கண்பார்க்க முடியாத வேகவூர்தி.
ஆனால் காதும் கேட்கவில்லை போலும்.
கூட்டத்தைப்பார்த்து மிரண்டு ஓடும்
அரசுப்பேருந்தும் அடித்துக்கொண்டோடும்
நீர்ப்படலமும் ஒன்று.
இரண்டும் நிற்க
அணை போடவேண்டும்.
என்னைச்சுமந்து செல்லும் நதியின் பாதையில்
கரிகாலன் இல்லையோ?
கடலையே வந்தடைந்துவிடுவேன் போலும்.
இனிக்கடலில் தான் இளைப்பாறல்.
காலமெனும் நில்லா நதியும் நானும்!
அசையாமை ஆழத்தில் தான் கிடைக்குமா?
3 notes
·
View notes
📰 இந்தியாவின் AIFF மீதான இடைநீக்கத்தை FIFA நீக்கியது | கால்பந்து செய்திகள்
📰 இந்தியாவின் AIFF மீதான இடைநீக்கத்தை FIFA நீக்கியது | கால்பந்து செய்திகள்
தேவையற்ற மூன்றாம் தரப்பு செல்வாக்கு காரணமாக இந்த மாத தொடக்கத்தில் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) மீது விதித்திருந்த இடைநீக்கத்தை FIFA வெள்ளிக்கிழமை நீக்கியது என்று கால்பந்து உலகளாவிய நிர்வாகக் குழு வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தடை நீக்கப்பட்டதன் மூலம், திட்டமிட்டபடி அக்டோபரில் இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை நடைபெறும் என்பதை உறுதி…
View On WordPress
3 notes
·
View notes
Randomtober Day 4 - Herbs
I've done a fair bit of Western apothecary/herbalism art, so today I thought I'd embrace my own roots. (Get it? Roots? Because plants? 😁)
These are Tamil medicinal herbs. கறிவேப்பிலை/kariveppilei or curry leaves (yes, while they are used a lot in the kitchen, they are also held to have medicinal properties and used thus); வேப்பிலை/veppilai or neem; ஓமவல்லி/omavalli or Indian borage; சிறியாநங்கை/siriyanangai or green chiretta; and of course துளசி/thulasi or holy basil, which you may recognise from my athelas drawing last year. 😉
My mother grew all of these. I grew up with my mum making me chew omavalli and drink omavalli infusions when I had a cold, making me chew veppilai when I was sick or put it and aloe vera on my pimples, and making me chew thulasi for colds and general health, and making a regular siriyanangai infusion for my dad. (We did also get our vaccines and see the doctor and get paracetamol and antibiotics! 😜 But these herbs were also soothing.)
I had planned to paint these with watercolours, but it was already half two in the morning and I struggled to capture the texture of the borage. Maybe another time. 😅
2 notes
·
View notes
விருப்பம்
எனக்கு கணினித் துறை மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் மற்றவர்கள் சொல்லும் வேலையை செய்ய பிடிக்கவில்லை. உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை எல்லாம் எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. அவைகள் எல்லாம் எப்படி இயங்குகிறது என்ற ஆவல் எனக்கு அதிகமாக உள்ளது. அதனை ஒருமுறை செய்து பார்க்கத்தோன்றுகிறது. ஆனால் என்னால் அதனை மனமாற செய்து பார்க்க முடிவதில்லை. காரணம் தேவையற்ற வேலைகள் என்னை செய்ய விடுவதில்லை. மேலும் எனக்கு படைப்பது பிடித்திருக்கிறது. எதையாவது உருவாக்குவது என்பதும் பிடித்திருக்கிறது. எனக்கு பிடித்தது போல் கற்க வேண்டும், கற்றதை எனது பாணியில் எண்ணி உருவாக்கவேண்டும். உருவாக்கியதை இரசிக்க வேண்டும்.
அப்படியே மகிழ்ச்சியாக உலகத்திடம் மனமாற உரையாட வேண்டும். உலகத்தோடு விளையாட வேண்டும். இயற்கையையும் இரசிக்க வேண்டும். எனது உடலை சிறப்பாக பலமாக வைத்திருக்கவேண்டும். விளையாட வேண்டும். ஆடிப்பாடி அலைந்து திரிய வேண்டும். புதிய உணர்வுகளையும் பட்டறிவையும் பெறவேண்டும்.
0 notes
https://noolagan.com/2022/10/blog-post_32/
மனம் அமைதியாக இருந்தால்
உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.
தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது.
சிறையில் மன் உளைச்சலில் அவரின்
கடைசி காலம் கழிந்தது.
அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவ்ர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.
ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை.சிறிது கால்த்தில் இறந்தும் போனார்.
பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறீப்பு இருந்தது.
அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்த்து.
ஆனால் அவரின் மனஉளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.
உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து
ஓட்டை போடும் எலி.
ஆனால் அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்.
மாவீரனுக்கும் சரி,சாதாரண எலிக்கும் சரி, பதட்டமும் மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது.
மனம் அமைதியாக இருந்தால்
பிரச்சனையை எதிர்நோக்கும்
சிந்தனை சிறப்பாக செயல்படும்.
இதற்கு தியானம் உதவும்......
0 notes
Books and Readers தமிழ்- #வாசிப்புப்போட்டி2023 வெற்றியாளர் பட்டியல்
Books and Readers தமிழ்- #வாசிப்புப்போட்டி2023 வெற்றியாளர் பட்டியல் வணக்கம். Books and Readers தமிழ் #வாசிப்புப்போட்டி2023 யின் வெற்றியாளர் பட்டியல் கீழே கொடுத்திருக்கிறோம். கருணாமூர்த்தி ஐயா அவர்கள் இம்முறை 753 புத்தகங்கள் படித்து பதிவு செய்து முதல் பரிசை பெறுகிறார். தொடர்ச்சியாக இரண்டாம் முறை முதலிடம் பிடிக்கிறார். 👏🏻🙏🏻🏆Sethuraman 630 புத்தகங்கள் பதிவு செய்து இரண்டாம் இடத்திலும் 105 புத்தகங்கள்…
View On WordPress
0 notes
மின்னல் சுடர் விழுந்து
மேகம் தீப்பிடிக்க,
நின்றேன் நின்றேன்
காதல் கொண்டு.....
1 note
·
View note
கற்பனை ஒரு கிருக்கல் 5
உலகம்
என் உயிருக்கும் மேலான மனிதர்களே துரோகம் என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் வேண்டுமென்றால் அது நீங்கள் தான் அன்பு என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் வேண்டுமென்றால் அது நான் தான் இதுவே நிதர்சனம் எனக்கு பகைக்க தெரியாது பகைத்தால். உன் செயல் என்னை சற்றே உலுக்கி விட்டது. சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை. கண்ணீர் வடித்தேன். என்னுடைய சீர்திருத்தப் பணி கடுமையாக உழைக்க வேண்டும்... மனதில் வைத்தேன்... கடுமையாக பழிவாங்க வேண்டுமென்று
யாருடா அது நீயா பல பொன் மொழிகளை ஆக்ரோஷமா வெட்டி திருத்தி அழுதேன் பழி வாங்குவேன் சீர்திருத்துவேன் என்று அண்ணன் யானைக்கு பூனைக்கு ஒரு பழமொழி உண்டு தெரியுமா ஓஹோ அதை வச்சி பேசுற
அதுக்கு இப்படியா சிரிக்கறது நல்லதா
இது என் முப்பாட்டன் மேல் சத்யம் சத்தியம் இது சத்தியம் எல்லாம் வல்ல இறைவனின் ஆணை... சொல்ல போவது யாவையும் உண்மை... சத்தியம் இது சத்தியம்... கேட்குறவங்க நம்பும்படி சொல்லணும்...
நல்லா கேட்டுக்கோங்க வாங்கின லஞ்சத்தில கமிஷன் கரெக்ட்டா போயிறணும்... குண்டுமணி அளவு கூட தவறு நடந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்...
ஐயா கோபம்
வேண்டாமே அமைச்சரே
கறிக்குழம்பு வாசனை மூக்கை துளைக்குதே, இப்ப தான் பேசவே ஆரம்பிச்சேன் அதுக்குள்ள ரெடி பண்ணிட்டாங்களா
கற்பனை ஒரு கிருக்கல் தொடரும்…
14 notes
·
View notes
உனக்குப் பிடித்தப் பூக்கள் எல்லாம் அள்ளி வந்து தந்து "இது வரை இது போல் நான் இல்லை" என நீ கூறக் கேட்டிடுவேன்.☺️❤️
To make you feel special In every way possible <3
3 notes
·
View notes
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
1 note
·
View note
உலகம் எதை நோக்கிப் பயணிக்கிறது?
“தான் வெற்றி பெற யாரையும் வீழ்த்தலாம் என்னும் நரி தந்திரங்களில் ஊறிப் போய் கொண்டிருக்கும் மனநிலையை எவரிடமும் காண முடிகிறது.”
சாமானியர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக ஓடிக் கொண்டிருக்கும் போது, இங்கு பணக்காரர்கள் நரித்தந்திரம் செய்து கொண்டிருக்கிறார்கள். சாமானிய மக்களிடமும் தொழிற்நுட்பம் சென்றடைய வேண்டும் என்று சில நிறுவனங்கள் குறைந்த விலையில் மொபைல் போன்களை விற்கிறார்கள் என்று நினைத்தால் அது தவறு.…
View On WordPress
0 notes