சந்தையியல் என்பது வர்த்தகத்தில் மிக இன்றியமையாத ஒரு கருவி ஆகும்.பொருட்களை உற்பத்தி செய்தவர்களும், நுகர்வோர்களும் சங்கமிக்கும் களத்தில்,விற்பனையை அதிகரிக்கவும்,தொடர் முன்னேற்றத்திற்கும் சில சந்தை விதிகள் உள்ளன.அதை துல்லியமாக புரிந்து செயல்படுத்தும் தொழில் முனைவோரே சந்தையில் நிலைத்து இயங்க முடிகிறது.
இதனை கருத்தில் கொண்டு நமது "Womentrepreneurs India"மிக சரியான ஒருவரை நம்முடன் கலந்துரையாட ஏற்பாடு செய்துள்ளது.
வரும் ஞாயிற்றுக் கிழமை ஜூலை 31 ம் தேதி மாலை 7 மணிக்கு நம் அனைவருக்கும் மிக பரிட்சயமான திரு.நியாண்டர் செல்வன் ( சந்தையியல் பேராசிரியர் - விஸ்கான்சின் பல்கலைக்கழகம்) அவர்களின் சந்தையியல் தொடர்பான ஆன்லைன் வெபினார் நிகழவிருக்கிறது.