*#ஸ்டார்வார்ஸ் #கிறிஸ்தவாகியஇயேசு #மேசியா #தேவகுமாரன்* http://ta.ChristianityOriginal.com/Jesus ஆதாம் பாவம் செய்தபோது, தேவன் ஆதாமை மீட்க ஒரு மீட்புத் திட்டத்தை அமைத்து (ஆதியாகமம் 3:15) கிறிஸ்துவை அனுப்புவதாக வாக்குறுதியளித்தார். ஆதாமின் மீட்கும்பொருளை செலுத்தி மனித இனத்தை காப்பாற்றுவதற்காக ஆதாமிற்கு பதிலாக உயிர்கொடுக்க தேவன் தனது ஒரேபேறான குமாரனை அனுப்பினார் (யோவான் 3:16). அவர் வல்லமை வாய்ந்த வார்த்தையானவரை (Logos) மரியாளின் கருப்பைக்கு மாற்றி மனிதன் இயேசுவாக (யோவான் 1:14) பிறக்க வைத்தார். ஆம், தேவனால் அனுப்பப்பட்ட கிறிஸ்துவாக (அபிஷேகம் செய்யப்பட்டவராக) இருப்பதால் இயேசு இன்னும் சிறப்பு வாய்ந்த அந்தஸ்து கொண்டிருக்கிறார். https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3303849379873549/?type=3
0 notes
*#பிறந்ததேசாகத்தான்டா* http://ta.ChristianityOriginal.com/Return *#முன்னறிவிப்பு* இயேசு, "மனுஷகுமாரன் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்," என்றார். மத்தேயு 20:28. *#எல்லாரும்ஜீவன்பெறுவார்கள்* ஓர் மனுஷனால் மரணம் உண்டானபடியால், ஓர் மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்ல���ரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 1 கொரிந்தியர் 15:21-22. *#கிறிஸ்து #இராஜாதிஇராஜா* இயேசு பிலாத்துவிற்கு பிரதியுத்தரமாக, "நீர் சொல்கிறபடி நான் *#இராஜா* தான், சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன். ஆனால் என் இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல," என்றார். யோவான் 18:36-37. *#அடுத்தஉலகம் #வரவிருக்கும்இராஜ்யம்* அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்." 2பேதுரு 3:13. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3303010609957426/?type=3
0 notes
*#வீண்பேச்சுதவிர்* http://ta.ChristianityOriginal.com/Jesus "வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடு! கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள். தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்." 1 தீமோத்தேயு 1:1-7 https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3301396950118792/?type=3
0 notes
*#டெனட் #மறுரூபமலைதரிசனம் #வரவிருக்கும்இராஜ்யம்* http://ta.ChristianityOriginal.com/Future இயேசு, "இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், ம��ணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்," என்றார். *#ஆறுநாட்கள்பின்னர் #இராஜ்யதரிசனம்* இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவன் சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு உயர்ந்த மலையின்மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. (ஆம், அவர் தான் சொன்னபடியே சிலருக்கு மட்டும் வரவிருக்கும் இராஜ்ய மகிமையை தரிசனமாக மறுரூபமலைமீது காண்பித்தார்) *#வரவிருக்கும்இராஜ்யம்* அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமத மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். மத்தேயு 16:28 -- 17:2; 25:31. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3300665023525318/?type=3
0 notes
*#அபாண்டப்பழி #மகதலேனாமரியாள் #அப்போஸ்தலர்களுக்குஅப்போஸ்தலர்* http://ta.ChristianityOriginal.com/Restoration லூக்காவின் நற்செய்தி 8:2–3இல் இயேசுவுடன் பயணம் செய்த பெண்களில் ஒருவராக மகதலேனா மரியாள் பட்டியலிடப்பட்டுள்ளாள். மற்றும் அவருடைய ஊழியத்தை தன் "ஆஸ்திகளால்" அவள் ஆதரிக்க உதவியது, அவள் செல்வந்தராக இருந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. நான்கு நியமன நற்செய்திகளிலும், மகதலேனா மரியாள் இயேசு சிலுவையில் அறையப்பட்டதற்கு சாட்சியாக இருந்தார். நான்கு சுவிசேஷங்களும் அவளை, தனியாகவோ அல்லது இயேசுவின் தாயை உள்ளடக்கிய ஒரு பெரிய பெண் குழுவின் உறுப்பினராகவோ, காலியான கல்லறைக்கு சாட்சியாக இருந்த முதல் நபராகவும், தனியாகவோ அல்லது ஒரு குழுவின் உறுப்பினராகவோ, இயேசுவின் உயிர்த்தெழுதலை காணும் முதல் சாட்சியாகவோ அடையாளம் கண்டுள்ளன. இந்த காரணங்களுக்காக, மகதலேனா மரியாள் சில கிறிஸ்தவ மரபுகளில் "அப்போஸ்தலர்களுக்கு அப்போஸ்தலர்" என்று அழைக்கப்படுகிறார். லூக்கா 8:2ல் அறிமுகப்படுத்தப்பட்ட மகதலேனா மரியாளை, பெத்தானியாவின் மரியாளுடனும் (லூக்கா 10:39) மற்றும் இயேசுவின் பாதங்களில் அபிஷேகம் செய்த (லூக்கா 7:36-50) பெயரிடப்படாத "பாவியான பெண்"ணுடனும் குழப்பிப் பேசி, போப்பாண்டவர் கிரிகோரி I 591-இல் அவளை ஒரு விபச்சாரியாக சித்தரிக்க செய்தார். போப் கிரிகோரியின் ஈஸ்டர் பிரசங்கம், மகதலேனா மரியாள் ஒரு மனந்திரும்பிய விபச்சாரி அல்லது நன்னடத்தை இல்லாத பெண் என்ற பரவலான நம்பிக்கையை ஏற்படுத்தியது. பின்னர் மேற்கு ஐரோப்பாவில் இருந்து மகதலேனா மரியாளின் செல்வம் மற்றும் அழகைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட விரிவான இடைக்கால புராணக்கதைகள் வெளிவந்தன. மகதலேனா மரியாள் தான் பெத்தானி மரியாள் என்ற நம்பிக்கையும் அவள் தான் பெயரிடப்படாத "பாவியான பெண்" என்ற நம்பிக்கையும், சீர்திருத்தத்திற்கு (Reformation) முந்தைய ஆண்டுகளில் பெரிய சர்ச்சையாக இருந்தது, சில புராட்டஸ்டன்ட் சீர்திருத்த தலைவர்கள் அதை நிராகரித்தனர். எதிர்-சீர்திருத்தத்தின் (Counter-Reformation) போது, கத்தோலிக்க திருச்சபை மகதலேனா மரியாளை தவத்தின் அடையாளமாக வலியுறுத்தியது. 1969 ஆம் ஆண்டில், போப்பாண்டவர் பவுல் VI பொது ரோமன் நாட்காட்டியில் இருந்து பெத்தானியாவின் மரியாள�� மற்றும் "பாவியான பெண்" என்ற இரு அடையாளங்களையும் மகதலேனா மரியாளிடம் இருந்து நீக்கினார், ஆனாலும் அவள் ஒரு முன்னாள் விபச்சாரி என்ற தவறான பார்வை நடப்பு கலாச்சாரத்தில் இன்னும் நீடித்து வருவது வருத்தம் அளிக்கிறது. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3290694517855702/?type=3
0 notes
*#உயிர்த்தெழுதல்வாரம் #உயிர்த்தெழுந்ததிருநாள் #மெய்கிறிஸ்தவம்பழகு #ஈஸ்டர்* https://ta.ChristianityOriginal.com/Kingdom இஸ்ரவேலில் ஒரு லோக்கல் சமய உட்பிரிவாக இருந்த கிறிஸ்தவம், அதன் தலைவர் [இயேசு] கொடூரமாக கொல்லப்பட்ட பின்னரோ, ஒரு உலகளாவிய இயக்கமாக பரவி உருமாறியது. ஆனால் அது எப்படி சாத்தியம்? பதில் மிக தெளிவானது: ஆம், கொல்லப்பட்ட இயேசுவின் கல்லறை காலியாக இருந்தது, உடலையோ காணோம்! மேரி மகதலேனா, அவரது சீடர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் உயிர்த்தெழுந்த தலைவரை சந்தித்தோம் என சாட்சி கூறினர். அவரது இராஜ்யம் பூமியில் வரும் என்று முழங்கினர். அம்மக்கள் அவர் உயிர்த்தெழுந்ததை மறுப்பதைக் காட்டிலும் தங்கள் உயிர் துறக்கவும் தயாராக இருந்தார்கள். அப்படியொரு வைராக்கியம் அவர்கள் கொள்ள காரணம் என்ன? இதன் பதிலும் மிக தெளிவானது: ஏனெனில் அவர் உண்மையில் உயிர்த்தெழுந்தார்! அவர்களை அவர் நேரில் சந்தித்தார். வரவிருக்கும் தனது இராஜ்யத்தை பிரசங்கிக்க கட்டளை இட்டார். *#கண்ணால்கண்டவர் #இயேசுஉயிர்த்தெழுந்தார்* https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3281519255439895/?type=3
0 notes
*#சாத்தான்சிறையடைப்பு #பரலோகத்தின்இராஜ்யம் #இடுக்கமானவழியும்நெடுஞ்சாலையும் #நியாயத்தீர்ப்புநாள்ஆட்சிக்காலம் #நியாயத்தீர்ப்புநாள்நீதிகற்கும்காலம்* http://ta.ChristianityOriginal.com/Judgment வசனங்கள் சொல்கிறபடி, உயிர்த்தெழுப்பப்பட்ட மனித இனம் *நீதியை கற்றுக்கொள்ளவிருக்கும் 'ஆயிரவருட அரசாட்சிக்காலமே' 'நியாயத்தீர்ப்பு நாள்' ஆகும்.* கிறிஸ்துவின் தெரிந்துகொள்ளப்பட்ட விசுவாசிகள் அவர்களுக்கு நீதி கற்றுக்கொடுப்பார்கள். ஆனால், *நீதி கற்றுக்கொள்வது என்பது மனிதருக்கு எப்போதுமே ஒரு கஷ்டமான விசயமாகத்தான்* இருந்து வந்துள்ளது. *இராஜ்யத்தில் மட்டும் என்னதான் வித்தியாசமாக* இருக்கப்போகிறது? 1. இன்று போலல்லாமல், *இராஜ்யத்தில் மனிதர் குறைவற்ற (மரபுவழி பாவமற்ற) சரீரம் கொண்டிருப்பார்கள்.* எனவே தன்னுள்ளேயே எதிர்த்து போராட வேண்டிய எந்த மனப்பிசாசுகளும் மனிதர்க்கு இருக்காது. 2. *சாத்தான் அந்த ஆயிரவருடமளவும் கட்டப்பட்டிருப்பான்.* இன்று அவன் பரவலாக செய்வது போல அன்று அவனால் யாரையும் ஏமாற்ற முடியாது (வெளி 20:2-3). *இன்று* மனிதரின் எதிராளியாகிய சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று நெடுஞ்சாலையில் வகைதேடிச் சுற்றித்திரிவதால் (1பேதுரு 5:8), ஒரு *இடுக்கமும், நெருக்கமுமான வழி மட்டுமே உள்ளது* (மத்தேயு 7:14). *ஆனால் அன்று* பூமியில் *நெடுஞ்சாலையான பரிசுத்த வழி இருக்கும்* (ஏசாயா 35:8) என தீர்க்கதரிசனம் உரைக்கிறது. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3274728479452306/?type=3
0 notes
*#தேவகுமாரன் #அகஸ்டஸ் #சீசர்* http://ta.ChristianityOriginal.com/Empire *#இராயன் #இராயனின்பட்டம் #கிறிஸ்துஇயேசு #மெய்யானஇராயன்* கிமு 42 இல், ஜூலியஸ் சீசர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் "தெய்வீக ஜூலியஸ்" (திவஸ் யூலியஸ்), அதாவது கடவுளாக / தேவனாக முறையாக சித்தரிக்கப்பட்டார். அவரது வளர்ப்பு மகன் அகஸ்டஸ் (கிமு 27 - கி.பி 14, அதாவது இயேசு தம்முடைய ஊழியத்தைத் தொடங்குவதற்கு சில தசாப்தங்களில்) இவ்வாறு "திவி ஃபிலியஸ்" (கடவுளின் மகன் / தேவகுமாரன்) என்று அறியப்பட்டார். அகஸ்டஸ் சீசர் (இராயன்), தன் சாம்ராஜ்யத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரவேல் உட்பட, ரோமானியப் பேரரசின் கடைசி எல்லைகள் வரை சீரான பிரச்சாரத்தின் மூலம் (எ.கா. *நாணயங்கள்)* தன்னை தேவகுமாரனாக உயர்த்திக் கொண்டார். 'விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் இயேசுவை கொண்டு வந்து நிறுத்தி: நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள். நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள். இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார். அதற்கு *அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள்.* அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியேதான் என்றார். அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள். அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் *பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்: இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், சீசருக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள்.* லூக்கா 22:66-71; 23:1-2. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3261505937441227/?type=3
0 notes
*#மாற்றுஇராஜ்யம் #சாம்ராஜ்யம்எதி��்ப்புசெய் #ஸ்டார்வார்ஸ்* http://ta.ChristianityOriginal.com/Empire கர்த்தர் பவுலிடம், "பவுலே, திடன்கொள். நீ என்னைக்குறித்து ரோமாபுரியில் சாட்சிகொடுக்கவேண்டும்," என்றார். *#பேரரசு* அவர்கள் சகோதரரை பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து, "உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை அரசர் என்று சொல்லி, ரோம பேரரசரின் கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்கள்," என்று கூக்குரலிட்டு, பட்டணத்து அதிகாரிகளை கலங்கப்பண்ணினார்கள். அப்போஸ்தலர் 23:11; 17:6-8. ஆம், ரோம பேரரசு போன்ற மனிதனின் இராஜ்யங்கள் தான் தற்பொழுது உலகில் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் அநீதி, அக்கிரமம், அநியாயம், கொடூரம், லஞ்சம், ஊழல், போர்கள், கொலை, கொள்ளை எல்லாம் பெருகி உள்ளன. ஆனால் இவை எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டுவரவிருக்கும் மகத்தான பேரரசு தான் கிறிஸ்துவின் இராஜ்யம். *#வரவிருக்கும்பேரரசு* அதில், நீதி, நியாயம், சமாதானம் செழிக்கும். மனிதர் அனைவரும் உயிர்பெற்று எழுவார்கள் (1கொரி 15:21-22). இழந்து போன அன்பிற்குரியவர்களை மீண்டும் கண்டு மகிழ்வார்கள். இன்னும் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த பேரரசில் நீங்களும் அரசர் ஆகலாம்!! ஆம், இயேசு, "முடிவுபரியந்தம் என் *#கிரியைகளைக்* கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, தேசங்கள் [உயிர்த்தெழுந்த மனுக்குலம்] மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இரும்புச்செங்கோலால் அவர்களை ஆளுவான், அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். *#கிரியைகள்* என்னைப் பின்பற்றிவா. மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ போய், வரவிருக்கும் தேவனுடைய பேரரசைக் குறித்துப் பிரசங்கி," என்றார். வெளி 2:26-27, லூக்கா 9:59-60. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3260732064185281/?type=3
0 notes
*#ஸ்கிட்கேம் #விரும்பாததீமையையேசெய்கிறேன் #பரமஅழைப்பு* http://ta.ChristianityOriginal.com/Change *#செத்தகிரியைகளில்இருந்துமனந்திரும்பு #எவனாலும்முடியாதகாரியம் #நியாயப்பிரமாணத்தின்கிரியைகள் #எல்லோரும்பாவத்தின்அடிமை #நிர்ப்பந்தமானமனுஷன்நான் #எனக்குள்வாசமாயிருக்கிறபாவம்* "உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம் உம்மைத் துதிக்கும்படி, பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்." சங்கீதம் 119:62. "நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது." 1யோவான் 1:8-10. பாவத்திற்கு எதிராக வேலைசெய்து நீதியுள்ளவனாக மாறுவது மனித சக்திக்கு சாத்தியமற்றது என்று பவுல் உறுதியாக அறிவிக்கிறார். ஆனால் ... ஏன் அப்படி? அவர் ஏன் என விளக்குகிறார் - 'நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன். எப்படியெனில், *நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். * இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. ஆதலால் *நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.* அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; *நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.* ஆதலால் *நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.* அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. *நிர்ப்பந்தமான மனுஷன் நான்!* இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?' ரோமர் 7:14-24. அடுத்த கேள்வி: சரி, எல்லா மனிதரும் இந்த நிலைமையில் இருப்பதன் காரணம் தான் என்ன? https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3259981630926991/?type=3
0 notes
*#மாற்றுஇராஜ்யம்* http://ta.ChristianityOriginal.com/Empire கர்த்தர் பவுலிடம், "பவுலே, திடன்கொள். நீ என்னைக்குறித்து ரோமாபுரியில் சாட்சிகொடுக்கவேண்டும்," என்றார். *#பேரரசு* அவர்கள் சகோதரரை பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து, "உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை அரசர் என்று சொல்லி, ரோம பேரரசரின் கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்கள்," என்று கூக்குரலிட்டு, பட்டணத்து அதிகாரிகளை கலங்கப்பண்ணினார்கள். அப்போஸ்தலர் 23:11; 17:6-8. ஆம், ரோம பேரரசு போன்ற மனிதனின் இராஜ்யங்கள் தான் தற்பொழுது உலகில் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் அநீதி, அக்கிரமம், அநியாயம், கொடூரம், லஞ்சம், ஊழல், போர்கள், கொலை, கொள்ளை எல்லாம் பெருகி உள்ளன. ஆனால் இவை எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டுவரவிருக்கும் மகத்தான பேரரசு தான் கிறிஸ்துவின் இராஜ்யம். *#வரவிருக்கும்பேரரசு* அதில், நீதி, நியாயம், சமாதானம் செழிக்கும். மனிதர் அனைவரும் உயிர்பெற்று எழுவார்கள் (1கொரி 15:21-22). இழந்து போன அன்பிற்குரியவர்களை மீண்டும் கண்டு மகிழ்வார்கள். இன்னும் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த பேரரசில் நீங்களும் அரசர் ஆகலாம்!! ஆம், இயேசு, "முடிவுபரியந்தம் என் *#கிரியைகளைக்* கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, தேசங்கள் [உயிர்த்தெழுந்த மனுக்குலம்] மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இரும்புச்செங்கோலால் அவர்களை ஆளுவான், அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். *#கிரியைகள்* என்னைப் பின்பற்றிவா. மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ போய், வரவிருக்கும் தேவனுடைய பேரரசைக் குறித்துப் பிரசங்கி," என்றார். வெளி 2:26-27, லூக்கா 9:59-60. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3259218551003299/?type=3
0 notes
*#மனிதரின்இராஜ்யங்கள் #vs #தேவனின்இராஜ்யம் #கொள்கைவேறுபாடுகள்* http://ta.ChristianityOriginal.com/Kingdom *#இன்றையசமூகம் #vs #கர்த்தராகியயாவேயின்இராஜ்யம் #பூமியில் #வரவிருக்கும்சமூகம்* மனிதர்களின் பேரரசுகளில் ஆட்சியாளர்கள் பார்வோன்களா, இராஜாக்களா, பேரரசர்களா, ரோம சீசர்களா அல்லது இன்றைய சர்வாதிகாரிகளா, அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகளா என்பது முக்கியமில்லை, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. 1. பேரழிவுகள் / வறட்சிகள் / மோசமான காலநிலை 2. சண்டை / பயங்கரவாதம் / போர்கள் கர்த்தரை தவறாக புரிதல் 3. சுயநல அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள் 4. அநீதி, தாமதமான நீதி, வெகுஜன சிறைவாசம் 5. இனவெறி, சாதிவெறி, ஆணாதிக்கம், பாரபட்சம், ஏற்றத்தாழ்வு, சுரண்டல் 6. வறுமை, சுகாதாரக் காப்பீட்டின்மை, வீடற்றவர், மனிதனால் பேரழிவுகள், கவலை 7. பிரிந்த குடும்பங்கள், இழந்த அன்புக்குரியவர்கள் 8. நாள்பட்ட நோய்கள், ஊனம், கொள்ளை நோய்கள் 9. விலங்கு, மனித உரிமை மீறல்கள் 10. மரணம்! மேல்தட்டோருக்கு மட்டுமே உயிர்த்தெழுதல் கர்த்தராகிய யாவேயின் வாக்குறுதியளிக்கப்பட்ட இராஜ்யத்தில், பூமியில் விசயங்கள் மாறும். பின்வரும் வகையில் சமூகம் செழிக்கும்.. 1. ஆரோக்கியமான சுற்றுச்சூழல் 2. சமாதானமான உலகம் 3. உலகெங்கிலும் கர்த்தர் பற்றிய அறிவு 4. மக்கள் சேவை செய்யும் அரசு 5. விரைவான பாரபட்சமற்ற நீதி 6. நியாயமான, எல்லாரையும் உள்ளடக்கிய, சமத்துவமான சமூகம் 7. நிதி பாதுகாப்பு, செழிப்பு 8. ஒருங்கிணைந்த, சமரசமான குடும்பங்கள் 9. ஆரோக்கியமான, திறனான மனிதர் 10. சக மனிதர்கள்/உயிரினங்கள் மீது அக்கறை வாழ்வு! எல்லோருக்கும் உயிர்த்தெழுதல் ஆமென். உம் இராஜ்யம் வருவதாக. இந்த கொள்கைகளைத் தான் இயேசுவை பின்பற்றுபவர்கள் இன்றைய வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்! https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3258498947741926/?type=3
0 notes
*#அதிசயம்ஆனால்உண்மை #நல்லசேதி* http://ta.ChristianityOriginal.com/Kingdom இயேசு, "இது முதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் *இராஜ்யத்திலே* நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்," என்றார். "கிறிஸ்துவினால் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்." "செத்தவர் செத்தவரை அடக்கம் பண்ணட்டும். நீ போய் தேவனுடைய இராச்சியத்தை குறித்து பிரசங்கி. இறுதி வரை செய்பவனுக்கு, [இராச்சியத்தில்] நான் [உயிர்ப்பிக்கப்பட்ட] தேசங்களின் மீது அதிகாரம் அளிப்பேன்." மத்தேயு 26:29, 1கொரிந்தியர் 15:21-22, லூக்கா 9:59-60, வெளி 2:26. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3253905161534638/?type=3
0 notes
*#வில்லாதிவில்லன் #நாம்தான் #மனுக்குலம் #விழுந்துபோனஇனம்* http://ta.ChristianityOriginal.com/Death “நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாயின் கர்ப்பத்தில் பாவம் கொண்டிருந்தேன்.” கர்த்தர், “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது,” என நினைத்தார். சங்கீதம் 51:5, ஆதியாகமம் 8:21. ஒரே மனுஷனாலே பாவம் உலகத்திலே பிரவேசித்தது. ரோமர் 5:12. ஆம், நாமனைவரும் பாவத்தையும், மரணத்தையும் ஆதாமிடமிருந்து வம்சாவழியாகச் சுதந்தரித்துள்ளோம். பாவமும், மரணமும் நமது மரபணுக்களிலேயே உள்ளன. பூமியில் பிறக்கும் எந்தவொரு குழந்தையும் மரண தண்டனைக்குட்பட்டிருக்கிறது. “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறோம்.” 1கொரி 15:22. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3253177824940705/?type=3
0 notes
*#lordofthewine #lifeoftheparty #தேவகுமாரன் #இயேசுகிறிஸ்து #சின்னகவுண்டர்* http://ta.ChristianityOriginal.com/Restoration 1. மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். 2. இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3. திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 4. அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். 5. அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். 6. யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. 7. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். 8. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். 9. அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: 10. எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான். 11. இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். யோவான் 2:1-11. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3252462248345596/?type=3
0 notes
#போர்களைநிறுத்துங்கள் #சமாதானம்உண்டாவதாக #யுத்தம்இல்லாதபூமி #ஒருசத்தம்இல்லாமல்வேண்டும் http://ta.ChristianityOriginal.com/Restoration https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3247878665470621/?type=3
0 notes
#போர்களைநிறுத்துங்கள் #சமாதானம்உண்டாவதாக #யுத்தம்இல்லாதபூமி #ஒருசத்தம்இல்லாமல்வேண்டும் http://ta.ChristianityOriginal.com/Restoration https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3247133022211852/?type=3
0 notes