நீர் மோருடன் கோமியம் வழங்கிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதா தமிழ்நாடு பாஜக?
“மக்களின் வெப்பசூட்டை போக்க பலரும் நீர் மோர் பந்தல்கலை திறப்பார்கள். ஆனால், நாம் அப்படி ஏனோதானோ என இருக்க முடியாது. மக்களின் சூட்டை போக்கும் விதத்திலும் அதேசமயம் உடல் பினிகளை நீக்கும் விதத்திலும் மோருடன் கோமிய பானத்தையும், கூடவே ஸ்ராபெரி, மாங்கோ, நன்னாரி வாசனைகளிலும் வழங்கி மக்கள் மனங்கவர வேண்டும்” என்று கடந்த மார்ச் 27ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டதாக சமூக…
2024ஆம் ஆண்டு விண்ணில் அமையவுள்ள பாரத் மாதா ஸ்பேஸ் ஸ்டேஷனைப் பற்றித்���ான் தற்போது அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, வடகொரியா,ஆகிய நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.! அது ஏன் இந்திய ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு உலகநாடுகள் அலறவேண்டும்? அங்கு தான் இருக்கிறது நம் இரும்பு மனிதர் நமதுஜியின் தந்திரம்.!
பண்டிட் கேஷவ் மஹ்ராஜ்ஜி என்பவரைப் பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியாது.. உ.பி.யின் (திமுக அல்ல) உஜ்ஜையினியில் பிறந்தவர்.. நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றிய சமஸ்க்ருதம், ஜோசியம் மற்றும் வான சாஸ்திரங்களில் வல்லுநர்.! இவரது முப்பாட்டனார் தான் ஆரியபட்டர், பாஸ்கரர் இவரது சாச்சா.!
ஹரித்துவாரின் குகைகளில் சிவபானம் இழுத்துவிட்டு அகோர நிலையில் இவர் செய்த யாகங்கள் உ.பி. முழுவதும் பெரிய பேச்சாக இருந்தது.! நமது ஆதித்யா டிவி.. அடச்சே!! ஆதித்யாஜி அங்கு முதல்வராக பதவியேற்றதும் தான் கேஷவ் மஹராஜ்ஜின் புகழ் வெளியே தெரியத் தொடங்கியது.! ஒரு நாள் இவரைப் பற்றி நம்..
ஆதித்யாஜி கட்காரிஜியிடம் சொல்ல அவர் அமித்ஜியிடம் சொல்ல அமித்ஜி நமது ஜியிடம் இவரைப் பற்றி சொன்னார் இவரின் பெருமையைக் கேட்ட ஜி அன்று மேக முட்டம் இருந்ததையும் பொருட்படுத்தாது விமானத்தில் உ.பி.விரைந்தார்.! நேரே சென்று கேஷவ் மஹராஜ்ஜை பார்த்து வணங்கினார் நமது ஜி.! க்யா சவுக்கிதார் ஜி? நிம்பள்..
மேக மூட்டத்தில் இராடார் மறையும் என்பது தெரிந்தே வந்தாயா என்றார் கேஷவ்!! அப்போது தான் அது நம் ஜிக்கே தெரியும்.! படார்னு கேஷவ்ஜி காலில் விழுந்து கும்பிட்டு இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற.. என்னும் வாக்கியத்தை முடிக்கும் முன்பே கேதார்நாத் குகைக்கு போங்கோ ஜி என அருள்பாலித்தார் கேஷவ்ஜி!
இமயமலையைவிட பெரும் மலையாக கேஷவ்ஜியை நம்பி கேதார் குகைக்குப் போன மோடிஜி சேதார் ஆகாது 350 தொகுதிகளில் வென்றுவிட மீண்டும் அவரிடம் ஆசி பெறப்போனார் மோடிஜி.. அப்போது தான் உலகமே துணுக்குறும் ஒரு இரகசியத்தை மோடிஜி காதில் மட்டும் அமித்ஷாவிற்கும் கேட்கும் படி ஓதினார் கேஷவ்ஜி.!
அதுவே பாரத் மாதா ஸ்பேஸ் ஸ்டேஷன்.! இராமாயணத்தில் வரும் புஷ்பக விமானத்தின் ஏரோநாட்டிக்ஸ் டெக்னாலஜியை இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ரிக் வேதத்தை இயற்றிய மாமுனிவர் ஒருவரின் குறிப்பில் இருப்பதைத் தந்து மோடிஜியை வியப்பில் ஆழ்த்தினார்! உடனடியாக இஸ்ரோவின் தலைமை ஆலோசகராக,
கேஷவ்ஜியை இரகசியமாக நியமித்தார் மோடிஜி.. கேஷவ் மஹராஜின் கண்டுபிடிப்புகளை கேள்விப்பட்டு மொத்த இஸ்ரோவிலும் இஸ்க் இஸ்க் என்னும் ஒலி எழும்பியது.. கோமாதாவின் சாணத்தில் கோபர் கேஸ் தயாரிக்கும் பழைய முறையுடன்.. அதன் கோமியத்தையும் கலந்தால் இராக்கெட்டில் ஃப்யூயலுக்கு உதவும் என்றார் கேஷவ்ஜி!
அதை ஆராய்ச்சி செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள் வியப்பில் உறைந்தனர்.! ஆம் சாதாரண இராக்கெட் ப்யூயல் லிட்டருக்கு 7 கி.மீ மைலேஜ் கொடுக்கும்.. ஆனால் கோபர் கோமியம் 70கி.மீ மைலேஜ் தரும் என்று அறிந்தபோது ஒரு நாள் மொத்த இஸ்ரோவுக்கும் விடுமுறை விட்டு அனைவரும் கண்ணீர்மல்க கைதட்டி மகிழ்ந்தனர்!
இந்த கோபர் கோமிய டெக்னாலஜியை கேள்விப்பட்ட அமெரிக்கா அதை தமக்கு தரும் படி மிரட்ட.. வழக்கம் போல ஆர்.எஸ்.எஸ் தவிர எவருக்கும் அடிபணியாத மோடிஜி இந்த தொழில்நுட்பத்தை தர மறுத்தார்.! எனவே தான் அமெரிக்கா நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரியை உயர்த்தி நம்மை பழி தீர்க்கப் பார்த்தது.!
அதிலும் கோபர் கோமிய கேஸில் இயங்கும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேறும் கோபரின் கழிவுகள் ஓசோன் ஓட்டையை அடைக்கும் வல்லமை பெற்றவை.! இதையும் கேஷவ்ஜி சொன்ன போது மோடிஜியே கலங்கி கண்ணீர் விட்டழுதார்.! 2024இல் பூமிக்கு மேல் ஆரம்பிக்க உள்ள பாரத் மாதா ஸ்பேஸ் ஸ்டேஷன்.. முற்றிலும்..
வேதமும் விஞ்ஞானமும் கலந்த ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷன்..! அது மட்டுமின்றி நிலவிற்கு நாய், பூனை, குரங்கு போன்றவற்றை அனுப்பி பரிசோதித்த உலகில்.. முதன் முறையாக 2026இல் சந்திர மண்டலத்திற்கு ஒரு கோமாதாவை இராக்கெட்டில் அனுப்பி பரிசோதிக்க உள்ளது இந்தியா.! இதற்காகத்தான் மாடுகளுக்கு..
ஆதார் கார்டு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.! கோபர் கேஸின் வெளியேற்றத்தால் நம் ஸ்பேஸ் ஸ்டேஷனை வேறு எந்த சாட்டிலைட்டாலும் கண்டறிய முடியாது என்பது தனிச்சிறப்பு.. இன்றும் இஸ்ரோவின் தலைமை ஆலோசகராக இருக்கும் கேஷவ்ஜியின் அறிவுரைப்படி..
சூரியனில் சூரியகாந்தி தோட்டத்தை உருவாக்கவும், சந்திரனில் சந்தனமரம் நட்டு வளர்ப்பதையும்..புதன் கிரகத்தில் புதினா பயிரிடவும்.. செவ்வாய் கிரகத்தில் செவ்வாழை பயிரிடவும்.. வியாழன் கிரகத்தில் விவசாயம் செய்திடவும் இஸ்ரோ பல திட்டங்களைத் தீட்டியுள்ளது.! மேலும் யுரேனஸ் கிரகத்தில் யூரியா கிடைக்குமா..
என்பதை அக்கிரகத்தின் ஏரியா முழுவதும் தேடும் யூரிஃபைண்டர் என்னும் துணைக் கோளையும் ஏவிவிட இஸ்ரோ முடிவு செய்துள்ளது.! இதைவிட பெரிய செய்தி பாரத் மாதா ஸ்பேஸ் ஸ்டேஷனில் விஞ்ஞான கோமாதாக்களின் அம்மா.. அம்மா என்னும் குரல் விண்வெளியெங்கும் ஒலிக்க உள்ளது.! இதை இ.பி.எஸ்சும் ஓ.பி.எஸ்சும் வரவேற்றுள்ளனர்.!
பணம், பொருள் & குவாட்டர் கோழி பிரியாணி வாங்கி கொண்டு வாக்களித்த நெ-15, பெருக்கரணை-கிராம மக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பிரதிநிதிகள் கொடுக்கும் தண்டனை கடந்த 07 (ஏழு) மாதங்களாக தொடர்கின்ற அவலம்
*#01-05-2022 அன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் குடிநீர் குழாய் பழுது பார்த்தல் செலவுகளோ ரூபாய் 3,50,000/- (மூன்று லட்சத்து ஐம்பதாயிரம்) கணக்கு சொன்னார்கள்.*
#கிராமசபை கூட்டத்தில் அரசு ஊழியர் & கிராம பிரதிநிதிகள் காதில் குத்தவே கேட்டேன்.
*#சுத்தமும் இல்லாத மற்றும் சுகாதாரமும் இல்லாத கோமியம் வாடையில் ஒனாங்கொடிசெடி, சேர் & சகதி கலந்த குடி தண்ணீரை கிராம மக்களுக்கு கிடைக்க செய்கின்றனர்*
#இந்த தண்ணீரை அருந்தும் மக்களுக்கு உடல் உபாதைகளும், இதே தண்ணீரில்தான் தவுடு & புண்ணாக்கு கலந்ததை சாப்பிடும் ஆடு & மாடுகளுக்கு கோமாரி மற்றும் உடல் உபாதை போன்ற நோயினால் அவதிபடுகின்றன.
*#குறிப்பு குடிநீர் குழாய் பழுது பார்த்தது செலவு ரூபாய் 3,50,000/- (மூன்று லட்சத்து ஐம்பதாயிரம்) கணக்கு சொன்ன லட்சணமா அல்லது குடிநீர் குழாய் பழுது பார்க்காமலே வளர்ச்சி நிதி கொள்ளை அடித்த லட்சணமா..?*
#குடிதண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒனாங்கொடிசெடி, சேர் & சகதி கலந்த குடிநீரை இந்த வீடியோ பதிவில் பார்க்க
1)
*மக்களின் வரிப்பணத்தில் மாதம் ஊதியம் வாங்கி உணவு உண்ணும் அதிகாரிகள்*
2)
*வரிப்பணம் செலுத்தும் தமிழக மக்கள்*
3)
*கிராம இளைஞர்-களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்*
இடம் பெருக்கரணை பெரிய ஏரி உட்பகுதி பேரம்பாக்கம் எல்லை ஆரம்பமாகும் இடத்தில் அமைந்துள்ள குடிதண்ணீர் வழங்கும் கிணற்று அருகாமையில்
மாட்டு சாணத்துக்கு பணம் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி, கோமியத்தையும் கொள்முதல் செய்ய காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், இதை ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் காமதேனு பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடங்கிய குழு, மாட்டு கோமியம்…
தினமும் கோமியம் குடிப்பதால் கொரோனா வராது என கூறிய பாஜக எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி
தினமும் கோமியம் குடிப்பதால் கொரோனா வராது என கூறிய பாஜக எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லி: பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தான் தினமும் கோமியம் குடிப்பதால் கொரோனா வராது என கடந்தாண்டு மே மாதம் பிரக்யா சிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர் மாட்டுச் சாணம் சாப்பிடும் வீடியோ… அதிர்ச்சியில் நெட்டிசன்ஸ்!
மருத்துவர் மாட்டுச் சாணம் சாப்பிடும் வீடியோ… அதிர்ச்சியில் நெட்டிசன்ஸ்!
ஹரியாணாவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் வீடியோவில் மாட்டுச்சாணத்தை சாப்பிட்டுக் காட்டி இது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என விளக்கம் அளித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
இந்தியாவில் மாட்டுச் சாணம், கோமியம் போன்றவை மருத்துவக் குணம் வாய்ந்தது என்ற நம்பிக்கை பொதுவாகவே இருந்துவருகிறது. இந்த நம்பிக்கைக்கு எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை.…
*நொச்சி இலையின் பயன்கள்.* நொச்சி இலை சிறு நீர் பெருகுவதற்கும் நோய் நீக்கி உடலைத் தேற்றுவதற்கும் மாதவிலக்கை ஒழுங்கு செய்வதற்கும் நுண் புழுக்களைக் கொல்லுவதற்கும் பயன்படுகிறது. பட்டை, காய்ச்சல் போக்கும். தமிழகம் முழுவதும் தானாகவே வளரும். வேறு பெயர்கள்: அக்கினி, அதிக நாரி, அணிஞ்சில், அதிகனசி, அதி கற்றாதி, அதியூங்கி, அரி, கொடிவேலி, சிற்றாமுட்டி, செங்கோடு வேலி, முள்ளி. வகைகள் : கருநொச்சி, வெறி நொச்சி. கருநொச்சி : இலைகள், பட்டைகள் கருப்பு நிறமாக அமைந்து இருக்கும். இதன் இலைகள் உள்ளங்கையளவு நீள அகலத்தில் இருக்கும். நொச்சி, நுனா, வேம்பு, பொடுதலை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் மிளகு 4, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளை 3 நாளுக்குக் கொடுக்க மாந்தம் குணமாகும். நொச்சி இலை 2, மிளகு 4, இலவங்கம் 1, சிறிய பூண்டுப் பல் 4 சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இரைப்பிருமல் (ஆஸ்துமா), மூச்சுத் திணறல் குணமாகும். தொடர்ந்து இப்படிச் செய்ய வேண்டும். நொச்சி இலைச்சாறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, மிளகுத்தூள் 1 கிராம், சிறிது நெய்யும் சேர்த்து கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்து, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்க மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பை மேனி, ஆடா தொடை, நாயுருவி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து, முக்கால் அளவு நீருள்ள வாய் அகன்ற மண் கலத்தில் கொதிக்க வைத்துச் சூடு செய்த செங்கல்லைப் போட்டு வேது பிடிக்க வாதம் அனைத்தும் குணமாகும். வாரத்துக்கு 2 முறை செய்யலாம். நொச்சியிலையைத் தலையணையாகப் பயன்படுத்த மண்டை இடி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்புவலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு (பீனிசம்) குணமாகும். மேலும் நொச்சிச் சாற்றை நரம்புப் பிடிப்பு, தலைநோய், இடுப்புவலிக்குத் தேய்த்துவர குணமாகும். நொச்சி இலைச் சாறு 5 மில்லியளவு எடுத்து பசுங் கோமியம் 5 மில்லியளவுடன் கலந்து 2 வேளை குடித்து வர கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் வீக்கம் குணமாகும். நொச்சி இலைச் சாறை கட்டிகளின் மீது இரவில் பற்றுப் போட்டுவர கட்டிகள் கரைந்து விடும். https://www.instagram.com/p/CUIPmSDJYZ9/?utm_medium=tumblr
மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா?
குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு/ பறவையினங்கள் போன்று இறந்த கிடக்கும் மயிலை யாரேனும் பார்த்ததுண்டா? ஏன்
நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா?
இயற்கையாக வயதாகி இறக்கும் மயில்களின் மரணத்தை எவருமே பார்க்க முடியாதாம். இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தனது இறப்பு நாள் நேரம் நொடி அனைத்தும் துல்லியமாக தெரிந்துவிடுமாம். அந்த விநாடியிலிருந்து அந்த மயிலானது மலை மீதுள்ள ஒரு முருகன் கோவிலில்..
ஒரு மறைவான இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டுமே அருந்தி “மயில்துயில்” எனும் விரதத்தை கடைபிடிக்குமாம் கடைசி 1 வாரம் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அதனுடைய முடிவு காலம் வரும் நாளுக்கு முதல் நாள் மட்டும் ஒரு கோமாதாவின் கோமியத்தை..
7 சொட்டு அருந்துமாம்! அப்போது மயிலின் கண்கள் வேர்த்து 6 சொட்டு கண்ணீர்த் துளிகளை பத்திரமாக ஒரு பாறை பிளவுக்குள் விடுமாம்! அடுத்த நொடியே அந்த பாறை பிளந்து கொள்ள மயில் அதனுள் அமர்ந்து தோகையை விரிக்க பாறை அதை நெருக்க அந்த முழுநாளும் மயில் ஓம் முருகா என்று சொல்லிக் கொண்டே..
தன் உயிரை விடுமாம். தோகை இல்லாத பெண் மயில்கள் தங்கள் கண்ணீரை வேல மரத்தில் விட்டு அது பிளந்ததும் இதே போல அமர்ந்து உயிர் துறக்குமாம்! வெள்ளை நிற மயில்கள் மட்டும் அக்கோவிலிலுள்ள வேலவன் கையில் இருக்கும் வேலில் பறந்து வந்து விழுந்து தங்களை மாய்த்துக் கொள்ளுமாம்!
அப்படி வேலில் இறக்கும் மயில்கள் அடுத்த நொடியே செவ்வரளி மலர் மாலையாக மாறி முருகன் காலில் விழுமாம்! இந்த அரிய உண்மைகளை எல்லாம் படிக்கும் போது 48 தினங்கள் = 1 மண்டலம், 7 சொட்டு கோமியம் = ஓம் சரவணபவ ஏழெழுத்து, 6 சொட்டுக் கண்ணீர் = அறுபடைவீடு, செவ்வரளி = முருகனின் பூ,
வேல மரம் = வேலுண்டு வினையில்லை, வேலில் மரணம் = யாமிருக்க பயமேன் என்பதை உணர்த்துகிறது அல்லவா! அதனால் தான் தெய்வ அம்சம் பொருந்திய மயில் முருகனுக்கு வாகனமாக மட்டுமின்றி நம் நாட்டு தேசியப் பறவையாகவும் இருக்கிறது! இப்படி தனது மரணகாலத்தில் கூட மிகவும் அமைதியாக..
எந்த உயிரினங்களுக்கும் இடையூறு செய்யாமல் முருகர் கோவிலேயே நோன்பிருந்து உயிர் துறக்கிறது மயில்கள்! விபத்து மற்றும் இன்ன பிற காரணங்களால் அடிபட்டு இறக்கும் மயில்களை மற்ற மயில்கள் பாம்பு புற்றின் அருகே இழுத்து சென்று விட்டுவிடும் அந்த சரவணனடி வாழ் சர்ப்பம் மயிலை புற்றுக்குள் தள்ளி..
உடலை மூடிவிடும். இது முற்றிலும் உண்மை இது குறித்து மயிலாடுதுறை மயில்சாமி சித்தர் எழுதிய “மயில் அகவல்” என்னும் நூலில் இத்தகவல்கள் காணப்படுவதாக விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூகுள் தெரிவிக்கிறது! மயில்சாமி சித்தர் உச்சி வெயிலில் பழனி மலையுச்சிக்கு சென்று, அங்கு..
ஒரு மொட்டைப் பாறையில் தனது ஒற்றைக் காலில் நின்று கடும் தவமிருந்து முருகனிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்ட வரங்களில் மயில்கள் தாங்கள் இறக்கும் நிலையை அறிந்து நோன்பிருந்து இறக்கவேண்டும். அதன் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்பவையாகும்.!!
தோகை விரிக்கும் போது மயில்களுக்கு சிலிர்ப்பது போல இதை படிக்கும் உங்களுக்கும் மெய்சிலிர்க்கிறதல்லவா!
பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா;தனியார் மருத்துவமனையில் அனுமதி!
பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா;தனியார் மருத்துவமனையில் அனுமதி!
கொரோனா தொற்று ஏற்பட்டால் கோமியம் என்கிற பசு மாட்டு மூத்திரத்தை குடித்தால் சரியாகி விடும் என்று மக்களுக்கு அறிவுறித்திய பாஜகவினர் தங்கள் தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மட்டும் அவ்வாறு சொல்லாமல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.