📰 ஆன் கேம்: ஸ்விங் நடுவானில் உடைந்து, மொஹாலியில் தரையில் விழுகிறது; பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
📰 ஆன் கேம்: ஸ்விங் நடுவானில் உடைந்து, மொஹாலியில் தரையில் விழுகிறது; பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
வெளியிடப்பட்டது செப் 05, 2022 08:44 AM IST
பஞ்சாபின் மொஹாலியில் நடுவானில் ஊஞ்சல் உடைந்து தரையில் விழுந்து நொறுங்கிய பயங்கர சம்பவம் கேமராவில் சிக்கியது. ஞாயிற்றுக்கிழமை இரவு மொஹாலியின் 8 ஆம் கட்ட கண்காட்சியின் போது இந்த திகில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது, இது ஊஞ்சலில் செயலிழந்து விழத் தொடங்கிய தருணத்தைக் காட்டுகிறது. இந்த விபத்தால் பலர் நாற்காலியில் இருந்து…
View On WordPress
0 notes
சிவன் மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இதுவரை வைக்காத பொருள் வைத்து பூஜை |...
0 notes
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அழகான ஊர்
அப்பா டிவி மெக்கானிக் வேலை முடிஞ்சு பத்தரை மணிக்கு தான் வீட்டுக்கு வருவாரு
எல மதன் உன் அண்ணனுவழ பாருல எப்புடி படிக்குரானுங்க பிரத்தோடத்துல நீ என்னல பண்ணிக்கிட்டு இருக்க��்னு அம்மா சத்தம் போட்டாங்க
அம்மா கூப்பிட்டது கூட தெரியாம தண்ணி தொட்டி மேல படுத்துகிட்டு வானத்துல பரக்குர பறவைய பார்த்து எதயோ யோசிச்சு கிட்டு இருந்தான் மதன் அம்மா மறுபடியும் சத்தம் போட கீழ எறங்கி புஸ்தகத்தை எடுத்துட்டு வீட்டுக்குள்ள போணன் மதன்
அம்மாவுக்கு மதன நெனச்சு தான் கவலை அண்ணனுவ ரண்டும் படிப்புல கெட்டிகாரனுங்க மூத்தவன் எல்லாப் பரிச்சயிலும் பஸ்ட் தான் வருவான் ஆன மதன் வகுப்புல எல்லாப் பாடத்துலயும் லாஸ்ட் தான் வகுப்புக்கு லேட்டாக தான் வருவான கிளாஸ் வாத்தியாருக்கு மதன திட்டாத அடிக்காத நாளே இல்ல உன் அண்ணனுவழ பாருல எப்புடி படிக்குரானுங்க அண்ணனுக்கு மாற்றமா இருக்காருன்னு சொல்லி தான் எல்லா வாத்தியாரும் திட்டுவாங்க அதுவும் கணக்கு வாத்தியார் பிரிடுணா மதனுக்கு பயம் வாய்பாடு தெரியாதவங்கள முட்டி போடவிட்டு அடிப்பாருன்னு பயந்து அடிக்கடி பள்ளிக்கு போகாம அட்டக்குள மேட்டுக்கு போயிடுவான் மதன் அங்க போய் காகா குருவி ட்ட தன்னுடைய சோக கதையை சொல்லுவான் இப்படியே போக விசயம் தெரிந்து வாத்திட்ட மாட்டிக்கொண்டான்
வீட்டுக்கு சேதி போயி உங்கள் பிள்ளை படிப்புல ரெம்ப மோசம இருக்கான் பள்ளிக்கு ரெகுலராக வராம பொய் சொல்லி ஊர் சுத்துறான் இவன் இப்படி இருந்தால் வாழ்க்கையில முன்னேறுவது ரெம்ப கஷ்டம்ன்னு வாத்தியாரு சொண்னாதும் அம்மாவுக்கு ரெம்ப கஷ்டமா பேச்சு அம்மா மதனுடைய எதிர்காலத்தை நினைச்சு ரெம்ப வருத்தப்பட்டாங்க ஆனால் மதன் அவன் வாத்தியார் சொல்லுரத காதுல வாங்காம சன்னல் வழியாக பட்டாம்பூச்சி பாத்து ரசிச்சுகிட்டு இருந்தான் அம்மா வாத்தியார் அம்மாகிட்ட டெய்லி அவன படிக்க சொல்லுங்க ன்னு சொன்னாங்க ராத்திரி அப்பா வீட்டுக்கு வந்ததும் அம்மா நடந்தத எல்லாம் சொல்லி பையன் எதிர்காலத்தை பத்தி நினைச்சு வருத்தப்பட்டாங்க அப்பா கையில ஐஞ்சு விரலும் ஒண்ணுபோலவா அதுமாதிரி தான் நம்ம பசங்ளும்னு சொன்னாறு ஆனா இந்த உலகத்துல நல்ல படிச்சு நல்ல மதிப்பெண் எடுத்தால் தான அது அவனோட எதிர்காலத்தை தீர்மானிக்குமனு சொல்லி அம்மா வருத்தப்பட்டாங்க அப்பா எதிா் காலத்துல நல்ல வருவான்னு சொல்லி சமாதானம் செஞ்சாரு மதனுக்கு இத பத்தி கவலை இல்லை
0 notes
4 🐊🐊 முதலைகள் உலகில் சாகசப்பயணம் 🐊🐊 4
எங்கள் படகை உரசி நெளிந்த அந்த முதலை ஒரு அலிகேட்டர் என்பது அதன் அகண்ட தாடையை வைத்து கணிக்க முடிந்தது. அதன் ரம்பப் பற்களின் இடையில் கொழுத்த மீன் ஒன்றை கவ்வியிருந்தது. சரேலென மீண்டும் நீருக்குள் அமிழ்ந்து மறைந்தது எங்கள் பயமும் பறந்தது முதலைகள் பொதுவாகவே கூச்சசுபாவிகள் அதனிடம் நாம் வாலாட்டினால் மட்டுமே அது வாயாட்டும் வேறு தொந்தரவுகள் தராது என்றார் கைடு / படகோட்டி.
இந்த எவர்க்ளேட் ஆற்றைப்பற்றி சில தகவல்கள் 100 சதுர மைல் பரப்பளவு நீளமும் 150 சதுர மைல் அகலமும் கொண்ட பெரும் நீர்ப்பகுதி ஆறெங்கும் கோரைப்புற்களும் எர்வாமேட்டின் கம்பெனி சொல்வது போல அரிய வகை நீர்த் தாவரங்களும் நிறைந்த ஏரியாகும்! சதுப்பு நில திட்டுகளும் தாவரக் காடுகளும் ஆங்காங்கே குட்டித் தீவுகள் போல அமைந்திருக்கும்.. இந்தச் சூழல் தான் முதலைகள் வாழ்வதற்கு மிக மிகப் பொருத்தமானவை.
முதலைகள் சதுப்பு காடுகளில் தாங்கள் இட்ட முட்டையை அழகாக கூடு கட்டி பாதுகாக்கின்றன. குட்டி வைக்கோல் போர் போன்ற கோரைப்புல்லில் ஆன முதலை கூடுகளை ஆங்காங்கே கண்டோம்.. பச்சைப் புல்வெளியில் அது மட்டும் தவிட்டு நிறத்தில் தனித்து தெரிந்தது. அங்குள்ள ஒரு வகை கோரைப்புல்லை கைடு கத்தியால் அறுத்துத் தந்தார் கீழிருந்து மேலாக அந்த புல்லை உருவுவது போல தடவினால் வெல்வெட் போலிருந்தது.
இப்போது அதையே மேலிருந்து கீழாக தடவுங்கள் மிக மிக மெதுவாக என்றார் நானும் அதை மேலிருந்து கீழாக தடவிய அடுத்த விநாடியே சுருக்கென்று என் விரலை துளைத்தது அந்த புல்.. துணி தைக்கும் ஊசியால் கையைக் குத்திக் கொண்டால் எப்படி இருக்குமோ அது போல என் விரலில் ஒரு ரத்த முத்து துளிர்த்திருந்தது! அந்தப்புல் கீழிருந்து மேலாக வெல்வெட் போலவும் மேலிருந்து கீழாக முட்களையும் இருமுகம் கொண்டது.
பிறகு அங்கிருந்த மூங்கில் தண்டு போன்ற ஒரு தாவரத்தின் தலையில் ஒரு பூ மஞ்சளில் சிரித்தது.. அதை உடைத்து உடைத்து ஒரு நெக்லெசாக மாற்றி ஒரு சின்னப்பெண்ணுக்கு பரிசளித்தார் படகோட்டி! அந்த இலையில் இருந்த ஒரு புழுவை தின்னப் போவதாக போக்கு காட்டி அனைவரையும் சிரிக்கவும் வைத்தார். மீண்டும் ஏர் போட் புறப்பட அங்காங்கே டைவ் அடிக்கும் முதலைகளை பார்த்துக் கொண்டே கரைக்கு திரும்பினோம்.
40 நிமிடப் பயணம் திரில்லிங்காக முடிந்தது! இந்த நதியில் ஏன் இந்த வகை ஏர்போட்டுகள் என்றால் தாவரங்கள் சேதமாகாமல் பயணம் செய்யவே என்பதும் பிறகு புரிந்தது! நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பெற்றுக் கொண்டோம்! அடுத்து அங்கு டிஸ்கவரி சானலில் நாம் பார்த்து ரசித்த உலகப் புகழ் கேட்டர் பாய்ஸ் வழங்கும் அலிகேட்டர் ரெஸ்க்யூ என்னும் ஷோவிற்கு சென்றோம். அதென்ன அலிகேட்டர் ரெஸ்க்யூ..?
50லிருந்து 60 இராட்சத முதலைகள் இருக்கும் ஒரு கூண்டு வேலி தெரிந்தது.. கரும் பாறைகளாக முதலைகள் அசைவின்றி குவிந்து கிடந்தன 8 அடி நீளம் முதல் 15 அடிவரை வித விதமான முதலைகள்! கூண்டைச் சுற்றி நாங்கள் எல்லாரும் நிற்க சினிமா காட்சிக்கு பெல் அடிப்பது போல மணி ஒலிக்க அந்த கூண்டுவேலியின் பக்கவாட்டு கதவை திறந்து கொண்டு கெளபாய் தொப்பியணிந்த இளைஞன் தனியாளாக கொஞ்சமும் அச்சமின்றி படுத்திருந்த முதலைகளை கடந்து உள்ளே நுழைந்தான்...
வரும்...
0 notes
யாருமே நுழையாத சபிக்கப்பட்ட கோவில்! கருவறைக்குள் மறைந்திருக்கும் ரகசியம்!
Hey guys! இன்னிக்கு நாம Chandi Kalasan ங்கர ஒரு ரொம்ப மர்மமான கோவிலுக்கு உள்ள தான் போயிட்டு இருக்கோம். இந்த கோவில்ல இருக்குற chambers க்குள்ள இதுவரைக்கும் யாருமே போனதில்ல. இன்னிக்கு நான் அத attempt பண்ணி பார்த்து, உள்ள என்ன இருக்குங்குறத உங்களுக்கு காமிக்க போறேன்.உள்ள இருக்கிற விஷயம் உண்மை ல ரொம்ப shocking ஆ இருக்கு. இந்தோனேஷியால நிறைய கோவில்கள் remote ஆன இடங்கள் ல தான் இருக்கு. ஆனா இந்த கோவில் Yogyakarta ங்கற ஒரு பெரிய city க்கு நடுவுல locate ஆயிருக்கு. ஆனா, நீங்க இந்த கோவில் complex குள்ள நுழையும்போது, யாருமே இந்த கோவிலுக்கு வரதில்ல ங்கரத புரிஞ்சிப்பீங்க. ஏன்? இந்த கோவில் சம்பந்தப்பட்ட ஏதாவது சாபத்துனால இருக்குமா? இந்த கோவில பத்தின You tube videos அ நான் செக் பண்ணினப்ப, இதுவரைக்கும் அந்த chabers குள்ள யாருமே போனதில்லங்குறத தெரிஞ்சுக்கிட்டேன்.
இது, பார்த்தா, ரொம்ப சுலபமா போகக் கூடியதா தான் தெரியுது. ஆனா இதுவரைக்கும் யாருமே ஏன் உள்ள போனது இல்ல?இப்படி ஒரு அருமையான கோவில யாரும் சபிச்சு இருக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். அதனால நான் இப்போ அந்த chambers குள்ள போக போறேன். இந்தக் கோவில் எவ்வளவு பழமையானதுன்னு உங்களால guess பண்ண முடியுதா? இந்த கோவிலோட கட்டுமானம் கிபி 778 ல தொடங்கினதா Archeologists confirm பண்றாங்க. அப்படின்னா, இது சுமார் 1250 வருஷங்கள் பழமையானது! இந்தப் பகுதியில இருக்கிற கோவில்கள்ல இதுவும் ஒண்ணு. ஆனா இதோ இங்கே தான் இருக்கு twist. இது ஒரு இந்து கோவில் இல்ல. இது ஒரு புத்த மதத்த சார்ந்த ஒரு கோவில். ஆனா இதைவிட ஒரு பெரிய twist என்னன்னா, இந்த கோவில் புத்தபிரானுக்காக கட்டப்பட்டது இல்லை இது தாராங்குற, ஒரு புத்த மதத்து பெண் தெய்வத்துக்காக கட்டப்பட்ட கோவில்.இந்த தாராவோட சிலை ,இந்த chamber குள்ள இருக்குமா? நாம அத கண்டு பிடிக்கலாம் வாங்க.! இந்த கதவ பூட்ட ல.
அதனால, நான் வெறுமே, இந்த முறுக்கின ஒயர தொறந்து கிட்டு உள்ள நுழையறேன் இது விசித்திரமான energy ஓட ஒரு வித்தியாசமான chamber ஆ இருக்கு. இங்க main சிலை ன்னு எதுவுமே கிடையாது. உண்மைல , இங்க சிலைகள் ஏதும் இருந்ததற்கான அடையாளமே இல்ல. ஒருவேள இந்த chambers க்கு சிலைகளோ விக்கிரகங்களோ இல்லவே இல்லையோ என்னவோ ? இல்ல வேற எந்த purpose காவது இத use பண்ணியிருப்பாங்களா? இந்த chamber mostly இடிஞ்சு தான் இருக்கு. ஆனா, இங்க பாருங்களேன்! இது என்னன்னு உங்களால சொல்ல முடியுதா? இதுதான் இதோட ceiling. இத ரொம்ப வித்தியாசமான shape ல கட்டி இருக்காங்க. ஒரே நடுப்புள்ளிய சுத்தி இருக்கிற octagons ஓடவும், உள்ள hollow வா இருக்கிற ஒரு பெரிய dome ஓடவும் இத செஞ்சிருக்காங்க. ஏன் அது hollowவா இருக்கு? அந்த dome உள்ள ஏதாவது ரகசிய chambers ஒளிஞ்சுக்கிட்டு இருக்கா? ஆனா இதவிட ரொம்பவே வித்தியாசமான ஒரு விஷயம் இந்த செவத்துக்கு மேல ரெண்டு பக்கத்துலயும் இருக்கு பாருங்க! இந்த ரெண்டு structures ஐயும் பாருங்க! என்ன இதெல்லாம்?
Praveen Mohan Tamil
1 note
·
View note
மகன் சஞ்சய் வாழ்க்கையில் விளையாடிய தந்தை விஜய் நைசாக எஸ்கேப் ஆன சிவகார்...
0 notes
ஆணிகால் வர காரணமாகும் காலணிகள் !
அதிகப் புழுக்கம், அதிகமாக மழைநீர் படுவதால் இப்படி ஏற்படும். சிலருக்கு சொறி, சிரங்கு போன்றவை வரும். இவர்கள் காலுறை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும்.
பெரும்பாலும் பருத்தியினால் ஆன காலுறைகளை அணிய வேண்டும். கால் எப்போதும் உராயக் கூடியதும், அழுத்தம் ஏற்படுத்திக் கொள்வதுமாகத் தான் இருக்கும்.
0 notes
பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட முதல் அஞ்சலி பாடல்! காணாம தேடுறோம்' கேப்டன் மறைந்த 48வது நாளில் வெளியீடு
காணாம தேடுறோம் ” பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட முதல் அஞ்சலி பாடல்! கேப்டன் மறைந்த 48வது நாளில் வெளியீடு இறந்து 48 நாட்கள் ஆன நிலையில், முதல் அஞ்சலி பாடலை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த…
View On WordPress
0 notes
📰 பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆன் கன்சர்வேட்டர்ஷிப், பிரிட்னி ஸ்பியர்ஸ் கார்டியன்ஷிப்: பிரிட்னி ஸ்பியர்ஸ் கன்சர்வேட்டர்ஷிப் பற்றிய ஆடியோ செய்தி: "நான் பகிரவில்லை..."
📰 பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆன் கன்சர்வேட்டர்ஷிப், பிரிட்னி ஸ்பியர்ஸ் கார்டியன்ஷிப்: பிரிட்னி ஸ்பியர்ஸ் கன்சர்வேட்டர்ஷிப் பற்றிய ஆடியோ செய்தி: “நான் பகிரவில்லை…”
பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆன் கன்சர்வேட்டர்ஷிப்: ஆடியோ செய்தி முதலில் பிரிட்னி ஸ்பியர்ஸால் ட்வீட் செய்யப்பட்டது.
நியூயார்க்:
பிரிட்னி ஸ்பியர்ஸ் ஞாயிற்றுக்கிழமை 13 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தந்தையின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சர்ச்ச��க்குரிய பாதுகாவலர் பற்றிய நீண்ட ஆடியோ செய்தியை வெளியிட்டார்.
நவம்பர் 2021 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிபதி ஸ்பியர்ஸின் தந்தையால் நீண்டகாலமாக மேற்பார்வையிடப்பட்ட…
View On WordPress
0 notes
Check out this post… "வாணியம்பாடி அருகே திருமணமாகி 6 மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.!வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக பெண்ணின் உறவினர்கள் போராட்டம்.!".
0 notes
ஆட்டிசம் என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு.
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகள் பொதுவாக இளம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதிக்கின்றன மற்றும் அவை நரம்பு வளர்ச்சி குறைபாடுகளின் தொகுப்பாகும், செய்யும் வேளையில் கவனம் செலுத்துவதில் சிரமம்,தீராத மனச்சோர்வு,பதட்ட நிலை அதிகரித்தல் இது போன்றவை ஆட்டிசம் அறிகுறிகளாகும்.
சரஸ்ப்ராமி எடுத்துக்கொள்வதன் மூலம்
சரஸ்ப்ராமி காப்ஸ்யூல் என்பது இயற்கை மூலப்பொருட்களால் ஆன ஆயுர்வேத தயாரிப்பாகும், எந்த பக்க விளைவுகளும் இல்லை.
தனிப்பட்ட வழிகாட்டுதலுக்கு எங்கள் ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.
தமிழகத்தின் தலைசிறந்த ஆயுர்வேத மருத்துவமனை. நாங்கள் 18க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்களுடன் செயல்பட்டு வருகிறோம்.ஆரோக்கிய வாழ்வுக்கு உறுதியான அடித்தளம் அமைக்க உதவும் பல வகையான சிகிச்சைகள் மற்றும் வாழ்வியல் முறைகளை நாங்கள் கற்றுகொடுத்து வருகிறோம் . இதில் யோகா, தியானம், உணவு விழிப்புணர்வு மற்றும் ஆயுர்வேத மருந்து ஆகியவை அடங்கும்.
நாள்பட்ட தீராத நோயிலிருந்து நிவாரணம் பெற, உங்கள் உடல்நலக் கோளாறுகளுக்கு சிறந்த சிகிச்சையைப் பெற்று ஆரோக்கிய வாழ்க்கை முறையை மேம்படுத்த விரும்பினால், ஸ்ரீ வர்மாவின் ஒருங்கிணைந்த அணுகுமுறையில் இணையுங்கள்.
எங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள : 9500946631 / 9500946635 / 04446094900
www.drgowthaman.com
www.shreevarma.online
#Shreevarmaayurveda#WellnessJourney#autism#autismawareness#concentration#WellnessGuruji#meditation#diet#chronicincurablediseases#longhealthylife#shreevarma#bestaryuvedichospital#Ayurveda#healthylifestyle
0 notes
POCO X6 5G BIS மற்றும் IMDA சான்றிதழ்கள்: லீக் ஆன முழு தகவல்.!
POCO X6 5G சிறப்பம்சங்கள்
POCO X6 5G ஐ குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 கள் ஜெனரல் 2 SoC ஆல் இயக்க முடியும்.
ஸ்மார்ட்போன் கோரில்லா கிளாஸ் விக்டஸுடன் 120 ஹெர்ட்ஸ் OLED காட்சியை வழங்கக்கூடும்.
இது 200MP கேமரா அமைப்பு மற்றும் 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், POCO X5 தொடர் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. POCO X5 தொடர் இரண்டு மாடல்களைக் கொண்டுள்ளது – POCO X5 மற்றும் POCO X5…
View On WordPress
0 notes
#கிரகக்கதைகள்
{3. மாதட்டி கிரகம்}
மாதட்டி கிரகத்தின் விண் கல்லும் விருந்து வைக்கும் என்பது விண்மொழி! விண்ணிலிருக்கும் கிரகங்களிலேயே அதிக வெரைட்டியான உணவு வகைகளை அற்புதமாக சமைக்கும் ஆற்றல் மிகுந்த கிரகம் மாதட்டி என்பார்கள்! ஆம் அதன் வரலாறு அப்படி! மாதட்டி கிரகத்தின் முன்னோர்கள் பூமிக்கே வந்து நமது சமையற்கலையைக் கற்றுக்கொண்டு விண்ணுக்குப் போனவர்கள்!
பூமியில் பெரும் ஜாம்பவான் சமையல் கலைஞர்களின் கீழே எடுபிடியாக இருந்து திறம்பட தொழில் கற்றுக் கொண்டு பின்னர் தங்கள் கிரகம் திரும்பி அங்கே எடப்பாடியானார்கள்! இப்படி சமையலில் பெரும் பின்னணி கொண்ட மாதட்டி கிரகத்தில் பல்வேறு விழாக்களில் பலவித உணவுகள் பிரமாதமாக தயாரிக்க பட்டன! ருசித்த மக்களெல்லாம் மாதட்டியின் புகழைப் பாட..
விண்ணில் எல்லா கிரகங்களும் மாதட்டி சமையல் குழுவிற்கே தங்களது விசேஷங்களுக்கான உணவுகளை ஆர்டர் செய்ய ஆரம்பித்தனர்!! மாதட்டியின் விருந்தில்லா விண்வெளி விருந்தே இல்லை எனும் கோஷம் விண்வெளியெங்கும் பரவியது! ஆனால் மாதட்டிக்கு முன்பே விண்வெளியெங்கும் வெற்றிக் கொடி நாட்டி தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாத வேறொரு கிரகக்..
கேட்டரிங்கும் இருந்தது! யாருய்யா இந்த மாதட்டி? என்று உறுமினார் காதட்டி கிரக சமையல் ம��ாராஜா கங்கன்! அய்யா இது நம்ம அண்டை கிரகத்து கேட்டரிங்! இன்று நமக்கு அதிக வாய்ப்பில்லாம இருக்க இவங்க தான் முழுக் காரணமும்! நாம விண்வெளி ருசியை வச்சி மேல வந்துட்டு இருந்தோம்! ஆனா இவங்க அப்பவே பூமிக்குப் போய் அந்த சமையலைக் கத்துகிட்ட..
அப்ரசண்டிங்க! என்றார் ஒருவர்! ஓஹோ பூமியில் கத்துகிட்டு வந்த வித்தையை வானத்தில் காட்டுறானா அந்த மாதட்டி! அவன் உடலில் செந்தட்டி தடவியது போல ஒரு செய்தியைச் சொல்றேன்! அதை பூமி உட்பட எல்லா கிரகத்திலும் சொல்லிடுங்க! ஆமா எப்படிய்யா திடீர்னு இந்த மாதட்டி கிரக சமையல் ஃபேமஸ் ஆச்சு? என்றார் கங்கன்! ஐயா! இப்பவும் அந்த மாதட்டி கிரகத்துக்காரங்க,
எங்கே உணவு சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடந்தாலும் வந்து கலந்துப்பாங்க! அவங்க நிறையா ஸ்பான்சரும் பண்ணி தங்கள் பிராண்டை ஃபேமஸ் ஆக்குறாங்க அதுவும் இப்போ பொறுப்பில் இருக்கும் மாதட்டி மங்கன் தலைமையில் தான் வெற்றிகரமாக இயங்குறாங்க! ஓகோ! அந்தளவுக்கு பெரிய பிராண்ட் ஆகிடுச்சா! விடமாட்டேன் நம்ம காதட்டி கிரகத்தின் கங்கன் கேட்டரிங்..
யார்னு காட்டுறேன்! இனி மாதட்டி ஃபிக்ஸ் பண்ற ரேட்டில் பாதி ரேட்டில் நாம தருவதா அறிவிச்சிடு! இதை பெரிய அளவில் விளம்பரம் பண்ணவும் மறந்துடாதே என்றார்! உடனடியாக ஒரு ப்ரமோஷன் கேம்பைன் ஆரம்பித்தனர்! அட்டகாசமான டிஸைன்களில் வண்ண வண்ண ப்ரவுஷர்கள், கேட் லாகுகள் பிரிண்ட் செய்யப்பட்டன, போட்டோ ஷூட்டுகள்..
விளம்பரப் படங்கள் எடுத்து கிரக டிவியில் ஒளிபரப்பினர். FM ரேடியோக்கள் காதட்டி புகழ் பாடின. பூமியிலும் இன்ஸ்டா, டிக் டாக் ரீல்ஸ்கள் பறந்தன! ஃபேஸ்புக் & X தளங்கள் போனாலே இந்த விளம்பரம் தான்! பற்றாக் குறைக்கு மாதட்டி விண்வெளி பொறுக்கிகள் என ஆஸ்தான எழுத்தாளர் மோக ஜெயன் கருத்து தெரிவிக்க காதட்டிக்கு ஆர்டர்கள் குவிந்தன! மாதத்தின்..
30 நாட்களில் 150 ஆர்டர்கள் வரை கிடைத்தது! இவரது சமையல் தேதி இல்லாததால் சில வீட்டு திருமணங்கள் 1 வருடம் வரை தள்ளி வைக்கப்பட்டன! மாதட்டியின் கூடாரம் லால் சலாம் ரிலீஸ் ஆன தியேட்டர் போல காற்றாட.. காதட்டியின் கூடாரத்தில் மஞ்ஞு மேல் பாய்ஸ் தியேட்டர் போல கூட்டம் கட்டி ஏறியது! என்ன செய்யப் போகிறீர்கள் மாதட்டி! உங்கள் சமையல் சாம்ராஜ்யம்..
அவ்வளவு தானா? காதட்டியின் வளர்ச்சியை தடுக்கவே முடியாதா? இப்படி பலரும் கேள்விகள் கேட்க! பளிச்சென புன்னகைத்தார் மாதட்டி! இப்பவே காதட்டிக்கு ஆர்டர்கள் குவியுது ஒரே நாளில் 5 இடங்களில் எல்லாம் சமைக்கவேண்டியது இருக்கு அவங்க முழி பிதுங்குறாங்க! இதே நிலைமை நமக்கு வந்தா நாம அதை எப்படி சமாளிக்கிறது? ஒரே நாளில் 10 பங்ஷன் வந்தா கூட நம்முடைய..
மேன்பவர், மெஷின் பவர் எப்படி அதிகரிப்பது? ருசியான உணவு, தடையில்லா சப்ளை இதை சிக்கலின்றி எப்படித் தருவதுன்னு நாம தயாராவோம்! நம்ம தொழிலில் புது யுக்திகளை புகுத்துவோம் அவங்களால தேதி தரமுடியாத விசேஷங்களை நாம அணுகுவோம் இன்னிக்கு அவங்க மேல இருக்காங்க அடுத்து நாம வருவோம்! இந்த இடைவெளி நம்மை பட்டை தீட்டிக்கத்தான்! என்றார்!
எல்லாம் சரிங்க இந்த விளம்பர ப்ரமோஷனெல்லாம்.. என்று இழுத்தார் ஒருவர்!
டோண்ட் ஒர்ரி நம்ம சமையலை மக்கள் சாப்பிட வேணாம் அவங்க சமையலை நான் சாப்பிடப்போறேன்!
என்ன சொல்றிங்க மாதட்டி புரியலையே?
நம்ம மாதட்டி கிரகத்து சானலில் “என்னை ஏற்காதவன் ஏமாளி” ன்னு ஒரு சமையல் நிகழ்ச்சி நடத்தப் போறேன்! பிறகு பாருங்க மக்கள் என் பக்கம் தான் என்றார் மாதட்டி.. பெருமையோடு மார்தட்டி! அவரது குழுவினர் அனைவரும் பாராட்டினர் கைதட்டி!!
0 notes
புத்தரின் சிதைக்கப்பட்ட தலை!!! ஏன்? அழிவின் விளும்பில் இருக்கும் இந்தோனேசிய கோவி!
Hey guys! இன்னைக்கு நாம இந்தோனேசியா ல இருக்கிற ரெண்டாவது பெரிய ���ுத்தர் கோவிலுக்கு தான் போய் பார்க்க போறோம். இது ஒரு ரொம்ப பெரிய கோவில். ஆனா இங்க யாருமே வரதில்ல. இந்த கோவில "சண்டி சேவு" ன்னு சொல்றாங்க. அதுக்கு ஆயிரம் கோவில்கள் இருக்கிற இடம் ன்னு அர்த்தம். இது தன்னோட பழங்கால ரகசியங்களுக்கு பேர் போனது. வாங்க! உள்ள போயி அங்க என்ன இருக்கு இ ன்னு பார்ப்போம்! நாம உள்ள நடந்து போகும்போது," துவார பாலகர்கள்" ங்கர இந்த ரெண்டு பிரம்மாண்டமான வாயில் காப்போர்களோட சிலைகள் தான் நம்மள வரவேற்குது. இந்த சிலைகள் ரொம்ப பெருசா ஏறத்தாழ 10 அடி உயரத்துக்கு மேலேயே இருக்கும். இது வாசலோட இடது பக்கத்தில் இருக்கிற வாயில் காப்பவர், அதாவது துவாரபாலகர். இவரு ரொம்ப பெருசா இருக்காரு பாருங்க! கிட்டத்தட்ட பத்து அடி உயரம் பக்கமா இருக்காரு. அவரோட கடா மீசைய பாருங்களேன்!
அவரோட வாய்க்குள்ள நீங்க பார்த்தா கோரைப்பற்கள் வெளியே நீட்டிக்கிட்டு இருக்கிறது உங்களுக்கு தெரியும். அவரோட கண்கள் ரெண்டும் வெளிய பிதுங்கி கிட்டு இருக்கு. ஏன்னா, எப்பவுமே அவரு கோபமா வே தான் இருக்காரு. அவரோட கையில "கதை" ன்னு சொல்ற ஒரு ஆயுதத்தை புடிச்சுகிட்டு இருக்காரு. அது ரொம்ப மிருகத்தனமா தாக்கக் கூடிய ஒரு பயங்கரமான ஆயுதம். அப்புறம் அவரு இந்த sacred thread அ போட்டுக்கிட்டு இருக்காரு. ஆனா, இது ஒரு sacred thread தானா?! இல்ல. Actual ஆ அவரு, ஒரு பாம்ப தான் கையில குறுக்கால போட்டு இருக்கார். பாருங்க!! மறுபடியும் பாம்பையே நகையாவும் போட்டுக்கிட்டு இருக்காரு. இப்ப நாம, இந்த பக்கம் இருக்கிற துவார பாலகர பாக்கலாம் வாங்க. இங்க நமக்கு என்ன கிடைக்குதுன்னு பார்ப்போம். இப்ப, இந்த பக்கத்துலயும் மறுபடியும் கோரை பற்களோடயும், பெரிய கடாசையோடயும் ஒரு துவார பாலகர நாம பார்க்கலாம். ஆனா அவரோட sacred thread அ பாருங்களேன்!! இங்க நீங்க, பாம்போட தலைய கூட பார்க்கலாம். கையிலயும் பாம்ப பார்க்கலாம். எப்படி இவரும் அந்த பாம்ப நகையா போட்டுக்கிட்டு இருக்காருன்னு பாருங்களேன்!!!
இங்க பாருங்க! இன்னொரு பாம்பு! கையில இன்னொரு பாம்ப புடிச்சுகிட்டு இருக்காரு. அந்த பாம்பு அவருக்கு பின்னால தன்னோட படத்த விரிச்சுக்கிட்டு இருக்கு. இங்க, நீங்க ஒரு interesting ஆன விஷயத்த பார்க்கலாம். அவரு ஒரு" கதை" ங்குற ஆயுதத்த மட்டும் கையில புடிச்சுகிட்டு இருக்கல, உறைல போடப்பட்ட ஒரு வாளயும் வச்சிருக்காரு. இந்த பூ design அயும் இங்க பார்க்கலாம். அதுவும் இல்லாம, அவரோட குதிகால்கள்ல, உடலமைப்போட துல்லியமாக பொருந்துற மாதிரி இருக்கற இந்த சின்ன சின்ன details களயும் பார்க்கலாம். இப்ப சண்டி அப்படிங்கறதுக்கு என்ன அர்த்தம் ?சண்டிங்கிற வார்த்தை கோவில் ங்கிறத மட்டும் தான் குறிக்கும். சேவுங்குற வார்த்தைக்கு ஆயிரம் ன்னு அர்த்தம். So, இந்த இடிபாடுகள முத முதல்ல கண்டு பிடிச்சப்போ, உள்ளூர் காரங்க இதுக்கு "ஆயிரம் கோவில்களோட இருக்கிற கோவில் வளாகம்" ன்னு அர்த்தம் வர மாதிரி பேரு வச்சாங்க. இந்த கோவிலோட main கடவுள் யாரு? இந்த கோவில் complex ஓட main கடவுள் யாருன்னு போய் பாக்கலாம் வாங்க! இந்த கடவுள் யாரு?
இவரு சிவபெருமானா? புத்தா? இல்ல, மகாவீரரா? இல்லாட்டி, இயேசுவா கூட இருக்கலாமா? இல்ல, வேற ஏதாவது கடவுளா இருக்குமா? யார் இவரு? இது யார் ன்னு உங்களால guess பண்ண முடியுதா ? இந்த சிலைய அடையாளம் கண்டுபிடிக்கிறது ரொம்பவே கஷ்டமா இருக்கு. ஏன்னா, முகம் தானே நம்ம எல்லாருக்கும் அடையாளம்?! தலையவே வெட்டிட்டா இவர யாருன்னு எப்படி கண்டு பிடிக்கிறது ? ஆனாலும், இவரு புத்த பகவான் தான் ங்கறது நமக்கு தெரியுது. அவரோட, உட்கார்ந்து இருக்கிற posture அயும் அவரோட கைகளோட முத்திரைகளயும் வச்சு, நாம அவர அடையாளம் கண்டு பிடிச்சுக்கலாம். இந்தோனேசியா ல இருக்கற நிறைய பேரு, இந்த தல இயற்கையாலதான் அழிக்கப்பட்டிருக்கு அப்படின்னு சொல்றாங்க. ஆனா, இயற்கை இந்த மாதிரி எல்லாம் வேல பண்ணாது. இயற்கை, எல்லாத்தையும் Even ஆ தான் அழிக்கும். தலைய மட்டும் எல்லாம் வெட்டி எடுக்காது.
Praveen Mohan Tamil
1 note
·
View note
மகன் சஞ்சய் வாழ்க்கையில் விளையாடிய தந்தை விஜய் நைசாக எஸ்கேப் ஆன சிவகார்...
0 notes