📰 மேலும் இலவச நீட் பயிற்சி மையங்களை திறக்கவும்: வி.சி.கே
📰 மேலும் இலவச நீட் பயிற்சி மையங்களை திறக்கவும்: வி.சி.கே
தமிழகத்தில் மருத்துவ ஆர்வலர்கள் ஜூலை 17-ம் தேதி நீட் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், அதிகமான மாணவர்களை கவரும் வகையில் இலவச நீட் பயிற்சி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற மேலவைத் தலைவர் சிந்தனைச் செல்வன் திங்கள்கிழமை மாநில அரசை வலியுறுத்தினார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு அரசு…
View On WordPress
0 notes
மாநகராட்சி சார்பில் இலவச நீட் பயிற்சி: சென்னை பள்ளி மாணவர்களுக்கு இன்று தொடக்கம் | Free Neet Training on behalf of the Corporation: Starting today for Chennai School students
மாநகராட்சி சார்பில் இலவச நீட் பயிற்சி: சென்னை பள்ளி மாணவர்களுக்கு இன்று தொடக்கம் | Free Neet Training on behalf of the Corporation: Starting today for Chennai School students
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னை பள்ளிகளில் 2020-21ஆம் கல்வியாண்டில் பயிலும் 101 மாணவ, மாணவியர்களுக்கு ‘நீட் (NEET) என்னால் முடியும்’ சிறப்புப் பயிற்சி திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் இன்று வெளியான செய்திக்குறிப்பு:
“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னை பள்ளிகளில் 2020-21ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவ, மாணவியர்கள்…
View On WordPress
0 notes
இலவச நீட் பயிற்சி மையம் இன்று முதல் தொடக்கம்!
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் இலவச நீட் பயிற்சி மையங்களில் சேர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இணைய வழியில் நடக்கும் இலவச நீட் பயிற்சி வகுப்பில் பிளஸ் 1 பதிவு எண்ணை பதிவிட்டு கலந்து கொள்ளலாம். 2021 நீட் தேர்வு நடைபெறும் முந்தைய வாரம் வரை மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துவரும் சூழலில், இன்று முதல் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்த கோவையைச் சேர்ந்த தனியார் அமைப்பு 2021ஆம் ஆண்டிற்கும் பயிற்சி அளிக்க உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக இணையவழி நீட் பயிற்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும், விருப்பம் உள்ள மாணவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. 4 மணி நேரம் வகுப்பு மற்றும் 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read the full article
0 notes
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச வகுப்பிற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது!!
0 notes
தமிழக நீட் இலவச பயிற்சி வகுப்பு முறையாக நடத்தப்படுகிறதா? | மாணவர்களின் ...
0 notes
இனி பள்ளிகளில் கரும்பலகை பதிலாக "ஸ்மார்ட் பலகைகள்"..! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..!
இனி பள்ளிகளில் கரும்பலகை பதிலாக “ஸ்மார்ட் பலகைகள்”..! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..!
இனி பள்ளிகளில் கரும்பலகை பதிலாக “ஸ்மார்ட் பலகைகள்”..! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..!
பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக புதிய பாடத்திட்டம் இலவச நீட் தேர்வு, பயிற்சி மையங்கள், ஆங்கில திறனை அதிகரிக்க வெளிநாட்டிலிருந்து பேராசிரியர்களை வரவைப்பது, சீருடையில் மாற்றம், பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு உள்ளிட்ட…
View On WordPress
0 notes
புனேயில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி... பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
புனேயில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி… பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
சென்னை: தனியாருக்கு நிராக அரசு பள்ளி மாணவர்களும் எளிதாக மருத்துவ படிப்பில் சேருவதற்கு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தங்கி இலவச நீட் தேர்வு பயிற்சி பெற தமிழக பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பயின்ற ஒரு மாணவர் கூட நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பிற்க செல்லும் தகுதி பெற வில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது. அரசு பள்ளிகளில் பயின்ற 2 ஆயிரம்…
View On WordPress
0 notes
Free NEET Coaching | நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் Royal Next International Academy Pvt Ltd.
Here are the complete Details of free NEET Coaching offered by the Royal Next International Academy Pvt Ltd. Also, check registration, and eligibility for applying the same.
.
.
Free NEET Class Apply Link: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfkaH5io29sB_6ckcOjZTnKIxP6oRaodj-zLe0qEMrkWPYStw/viewform?usp=sf_link
.
.
Class Start Date: 𝟒𝐭𝐡 𝐒𝐄𝐏𝐓𝐄𝐌𝐁𝐄𝐑
.
.
𝐃𝐑.𝐒.𝐒𝐀𝐍𝐓𝐇𝐀𝐍𝐀𝐊𝐑𝐈𝐒𝐇𝐍𝐀𝐍. 𝐌𝐃 𝐏𝐇𝐘𝐒𝐈𝐂𝐈𝐀𝐍.Registered Indian medical practitioner.
𝐑𝐨𝐲𝐚𝐥 𝐧𝐞𝐱𝐭 𝐢𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐚𝐜𝐚𝐝𝐞𝐦𝐲 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
32/67, East Jones Road, Saidapet.
Chennai-600015, Tamil Nadu.
0 notes
“தமிழ் மாணவர்கள் போராடுவது இந்திய மாணவர்களுக்காகவும்தான்!” - ‘நீயா நானா’ கோபிநாத்
நீட் குறித்து, தான் நடத்தும் 'நீயா நானா' நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களிடையே ஒரு குறிப்பிட்ட அளவு கவனத்தை ஈர்த்தார் கோபிநாத். அனிதாவின் மரணத்துக்குப் பின் அவரின் வீட்டுக்குச் சென்றிருந்தார். தமிழகம் முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வரும் சூழலில் அவரிடம் பேசினோம். "தமிழக மாணவர்களின் போராட்டம் என்பதே இந்திய மாணவர்களுக்கான போராட்டம்தான்" என்ற கோபிநாத் மேலும் தொடர்ந்தார்.
"மாற்றம் எல்ல இடங்களில் நடக்கத்தான் செய்கிறது. அந்த மாற்றத்தை "தகுதி" "தரம் உயர்த்துதல்" போன்ற மறுக்கமுடியாத காரணங்களைச் சொல்லி வலிந்து திணிக்கிறார்கள். இங்கு இருக்கும் கவலை என்னவென்றால், சாமானியன் மருத்துவம் படிக்க வருவது என்பது ஏழைக்கு வாய்ப்பு கொடுப்பது என்றெல்லாம் இல்லை. அது சமூகத்தை சமநிலைப்படுத்துவது.
அதுதான் இட ஒதுக்கீட்டில் முக்கியமான விஷயம். இங்கு உள்ள சிக்கல் என்னவென்றால்... ஒருவரைப் படிக்கச் சொல்கிறோம். 'நீ நன்றாகப் படித்து மதிப்பெண் வாங்கினால் மருத்துவப் படிப்பைப் படிக்கலாம்' என்று சொல்கிறோம். அவரும் நாம் சொன்னபடி பல ஆண்டுகள் நன்றாகப்படித்து நல்ல மதிப்பெண் வாங்குகிறார். அதற்குப் பின்னும் நாம் வேறு ஒரு வினாத்தாளைக் கையில் கொடுத்து இதில் தேர்ச்சி பெற்றால்தான் உனக்கு மேற்படிப்புக்கு அனுமதி என்று கூறுவது நியாயமற்ற செயல்.
ஒருவேளை இதே பாடத்திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு, அவர்கள் வெல்லவில்லை என்றால் நாம் ஏற்றுக்கொள்ளலாம்.
நீட் ஒரு தகுதி நுழைவுத்தேர்வு என்று வைத்துக்கொண்டால் கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய மாணவர்கள் அதற்கான பயிற்சி பெற என்ன வழிமுறை இருக்கிறது? இதே நீட் தேர்வில் தற்போது வெற்றி பெற்றுள்ளவர்களில் இரண்டாவது முறை மற்றும் மூன்றாவது முறை முயற்சி செய்தவர்கள் நிறையப்பேர் உள்ளனர்.
காரணம் நீட் தேர்வில் வெற்றி பெற காலமும், பணமும் தேவையாக இருக்கிறது. ஒருமுறை தோற்றவர்கள் இரண்டாம் முறை படித்து எழுதக் காலமும், பணமும் தேவையாக இருக்கிறது. இங்கு பெரும்பாலான மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதே பெரும் சவாலாக உள்ளது. பணம் இருப்பவர்களை மட்டுமே நினைவில் கொள்ளக்கூடாது.
சமூகநீதி என்பது என்னைவிடப் பின்தங்கியுள்ளவன் குறித்தும் கவனத்தில் கொள்வது மட்டும்தான். நான் மட்டும் ஜெயித்துக்கொள்கிறேன் என்பது முதலாளித்துவம். படாத பாடுபட்டு பன்னிரண்டாவது தேர்ச்சியாகி வந்தவனுக்கு நீங்கள் புதிதாக ஒரு தேர்வை முன்வைக்கிறீர்கள். அதில் அவன் தோல்வியடைந்தவுடன் 'கவலைப்படாதே..
உனக்கு இன்னும் இரண்டு வாய்ப்பு உள்ளது. அடுத்த ஆண்டும் எழுதலாம்' என்று பெருந்தன்மையுடன் சொல்கிறீர்களே. அடுத்த ஓராண்டு முழுவதும் கோச்சிங் கிளாஸ் செல்வதற்கு அவன் என்ன உங்களைப் போன்ற குடும்பச் சூழலிலா இருக்கிறான்? அடுத்த ஓராண்டில் அவன் வாழ்க்கை என்னவெல்லாம் ஆகும் என்று யாருக்குத் தெரியும். அவனிடம் போய் 'முயன்றால் முடியாதது இல்லை. என்று தன்னம்பிக்கை ஊட்டிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களை விட அதிக தன்னம்பிக்கை உள்ளதால்தான் கொசுக்கடியிலும், குடிசையிலும் இருந்து நீங்கள் கேட்கும் மதிப்பெண்ணை வாங்கி வந்திருக்கிறான்.
மதிய உணவை ஏன் கொண்டு வந்தோம்? பிள்ளைகள் சாப்பாட்டுக்கு எங்கே போவான். சாப்பாட்டைக் காரணம் காட்டி இவன் படிக்காமல் போய்விடக்கூடாது என்பதால்தான் மதிய உணவுத்திட்டமே கொண்டு வரப்பட்டது. இன்னமும் பெருவாரியான மாணவர்கள் மதிய உணவைச் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசு தரும் இலவச பஸ் பாஸை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
குடும்பத்தின் வறுமையை வென்று, பசி வென்று, தந்தை இல்லாத, தாய் இல்லாத குடும்பங்களில் வளர்ந்து எனப் பலநெருக்கடிக்கு பிறகு அவன் பன்னிரண்டாம் வகுப்பு வென்று இருக்கிறான். இந்தப்பிள்ளைகளிடம் மீண்டும் பயிற்சியெடுத்து வெற்றி பெறலாம் என்று அறிவுரை சொல்லக்கூடாது. எந்த ஒரு சட்டமோ, ஒரு மாற்றமோ அது சாமானியனை பாதிக்கக்கூடாது. தகுதி உயர்த்தல் குறித்து யாரும் இரண்டாவது கருத்து வைக்கவில்லை.
இந்தியா முழுவதும் நிறைய மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கு இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளை அந்தந்த மாநிலங்கள் அதிகரிக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பை மத்திய அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு 24 அரசு மருத்துவக்கல்லூரிகள் 13 தனியார் கல்லூரிகள் இது இல்லாமல் 10 தனியார் பல்கலைக்கழகம் கொண்டுள்ள தமிழகத்தின் கல்வி வளத்தில் பங்கு போட வருவது நியாயமே இல்லை. பகிர்தலுக்கும் விட்டுகொடுத்தலுக்கும் தமிழர்கள் என்றைக்கும் தயாராகத்தான் உள்ளனர். ஆனால் வெறுங்கையுடன் வருபவர்களுடன் எப்படி பங்குபோட முடியும்.
இது ஏதோ தமிழ்நாட்டின் பிரச்னை என்பது போல் சொல்லுகிறார்கள். மாற்றத்தையும் நவீனத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம் என்று ஜல்லிக்கட்டையும், நெடுவாசலையும், கதிராமங்கலத்தையும் உதாரணமாகக் காட்டி பேசுகின்றனர். மாற்றம் என்ன செய்யும் என்று படித்த சமூகத்துக்குத்தான் தெரியும். தமிழ்ச் சமூகம் நமக்கு அறிவுரை சொல்பவர்களை விடப் படித்த சமூகம்.
வலுவான உட்கட்டமைப்பு கொண்ட நம் மாநில மாணவர்களை விடுங்கள். ஜார்கண்ட், உத்ரகாண்ட், பீகார் தொடங்கி அங்கு இருக்கக்கூடிய மாணவர்கள் கோச்சிங் சென்டர் செல்ல முடியுமா? அவர்களுக்குக் கல்வியே சவாலாக இருக்கிறது. இங்கு வேலைக்கு வரும் வடமாநில இளைஞர்களின் கல்வித்தகுதி எந்த அளவில் இருக்கிறது. நமது மாணவர்கள் கூட இந்த ஆண்டுதான் ஏமாந்துவிட்டார்கள்.
அடுத்த ஆண்டு இதே நீட் அமலில் இருந்தால், தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் கூட அசால்ட்டாக தேர்வை எழுதி பாஸ் ஆவார்கள். அறிவார்ந்த சமூகம் எல்லாப்பக்கமும் எழும் விளைவுகளையே யோசிக்கும். நாம் அவர்களுக்கும் சேர்த்துத்தான் போராடிக்கொண்டிருக்கிறோம். ஏதோ தமிழ் மாணவர்கள் சுயநலத்துடன் தங்களுக்காகப் போராடவில்லை. அப்பாவி வட மாநில மாணவச் சகோதரனுக்காவும்தான் வீதியில் போராடிக்கொண்டிருக்கிறான்.
யோசித்துப்பாருங்கள், இங்க��� வந்து வடமாநில இளைஞர்களின் குடும்பங்களில் இருந்து ஒரு டாக்டர் உருவாகமுடியுமா? ஆனால் குடிசைகளில் இருந்து அனிதாக்கள் வருகிறார்கள். காரணம் இது தமிழ்நாடு. மாணவர்களின் இந்தப் போராட்டம் என்பது படிக்க வழியில்லாத, எளிய, தகுதியிருந்தும் படிக்க முடியாத இந்திய மாணவர்களுக்கான போராட்டத்தை தமிழக மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் போராட்டம் என்பது நம்பிக்கை துரோகத்துக்கு எதிராக நடக்கிறது. 'பொறுப்பாகப் படி, டிவி பார்க்காதே, விளையாட்டில் கவனம் செலுத்தாதே' என்றெல்லாம் சொன்னோம். அதை எல்லாமே கேட்டு தன் பொழுதுபோக்குகளை, ஆசாபாசங்களை விட்டுக்கொடுத்துக் கண்விழித்து படித்து வந்தவனை மறித்து உனக்குத் தகுதி இல்லை என்று சொல்வது நம்பிக்கை துரோகமின்றி வேறு என்ன?
‛இந்த ஆண்டு இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு நுழைவுத்தேர்வு எழுதலாம்தானே... அதற்கு ஏன் இவ்வளவு கோபம்’ என்று கேட்கின்றனர். இங்கு பெரும்பாலான வீடுகளில் பையன் படிக்கிறான் என்றுதான் வேலைக்கு அனுப்பாமல் இருக்கின்றனர். 'என் மகள் என்னதான் தப்பு பண்ணுச்சு" என்று அனிதாவின் அப்பாவின் கேள்விக்கு யாரிடம்தான் பதில் இருக்கிறது. இதை அவர் என்னிடம் கேட்ட போது என்ன சொல்லி தேற்றுவது என்றே தெரியவில்லை.
இங்கு மாணவர்கள் சுயநலத்துடன் போராடவோ, சத்தம் போடவோ இல்லை. அவர்கள் தங்களுக்கும் சேர்த்து இந்திய ஏழை எளிய, வாய்ப்பற்ற மாணவர்களுக்காகப் போராடுகின்றனர். நீட்டின் மூலம் தேர்வு செய்யப்படும் ஒருவர்தான் மருத்துவம் படிக்க தகுதியானவர் என்று எப்படி உறுதிப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. நீட் தான் முடிவு, அதில் மறுபரிசீலனை இல்லை என்கிறபோது, அடுத்த ஆண்டும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் மாணவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
சமூகம் சமமாக மாறவேண்டும் என்று நினைக்கும், சமூக நீதி வேண்டும் என்று விரும்பும் சமூகம் இப்படித்தான் நடந்துகொள்ளும். எனவே தமிழக மாணவர்களின் போராட்டங்களில் அனைத்து நியாயமும் உள்ளது.
இந்த நான்கு விஷயங்களை முக்கியமாகக் கூறவேண்டும் என்று நினைத்தேன். இவை எல்லாம் தாண்டி தமிழக மாணவர்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் 'நீங்கள் நன்றாகப் படிக்கிறீர்கள் என்றால் வாய்ப்பற்ற மாணவனுக்கு கை கொடுங்கள். சொல்லிக்கொடுங்கள். அவர்களையும் கை தூக்கிவிடுங்கள். தமிழனைப்போல் கல்விக்கு உதவுபவன் யாருமே கிடையாது. அது பொருளாதார உதவியாக இருந்தாலும் சரி அறிவு ரீதியாக இருந்தாலும் சரி' போராட்டத்தில் தொடங்கி நீட்டை எதிர்கொள்வது வரை மாணவர்களின் கையில்தான் அனைத்துமே உள்ளது" என்றார் கோபிநாத்.
0 notes
Free NEET Coaching | நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் Royal Next International Academy Pvt Ltd.
Here are the complete Details of free NEET Coaching offered by the Royal Next International Academy Pvt Ltd. Also, check registration, and eligibility for applying the same.
0 notes
இயற்பியல் பாடத்துக்கு இலவச செயலி: புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை
இயற்பியல் பாடத்துக்கு இலவச செயலி: புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை
தமிழக அரசின் பாடநூல் கழகத் தின் புதிய கல்வித்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக உள் ளது. நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை வெறும் பள்ளிப் படிப் பினால் மட்டுமே எதிர்கொள்ள முடி யாது என்ற மனப்பாங்கை வணிகவி யல் ரீதியாக இயங்கும் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் மக்களி டம் தவறான எண்ணத்தை ஏற் படுத்தி வருகின்றன.
இந்நிலையில் புதுச்சேரி புராண சிங்கு பாளையத்தில் உள்ள பாவேந் தர் பாரதிதாசன்…
View On WordPress
0 notes
அ.தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு இலவச கையேடு அ.தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு இலவச கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கையேடுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை: அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அம்மா கல்வியகம் சார்பில் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு இலவச கையேடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு இலவச கையேடுகள் வழங்கப்பட்டன. இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, நீட் தேர்வு உள்பட அனைத்து விதமான தேர்வுகளுக்கும் தயாராகும் வகையில் அ.தி.மு.க. சார்பில் இலவச கையேடுகள் வழங்கியிருக்கிறோம். அம்மா கல்வியகம் ( www.kalviyagam.in) என்ற இணையதளத்தில் இந்த புத்தகத்தை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இது மாணவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் இருக்கும் என்றார். ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த ஜெயலலிதா பாடுபட்டார். இதற்காக கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தார். கல்வித்தாயாக ஜெயலலிதா விளங்கினார். தற்போது இந்த அரசும் மாணவர்களுக்காக பாடுபட்டு வருகிறது. பல்வேறு வங்கிகளில், நிறுவனங்களில் வேலையில் சேர உரிய பயிற்சி அளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சியை ஜெயலலிதா கொண்டு வந்தார். இளைஞர்கள் சுய தொழில் தொடங்க நல்ல சூழல் இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது. அம்மா கல்வியகம் மூலம் பிளஸ்-2 மாணவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது வரையில் இந்த இணையதளத்தில் 3½ லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அதிக மதிப்பெண்களையும் பெற்று உள்ளனர். உயர் படிப்புகளிலும், அரசு தேர்வுகளில் வெற்றி பெறும் வகையிலும் கையேடு வழங்கப்பட்டு இருக்கிறது’ என்றார். மாணவர்கள் இந்த கையேடுகளை பதிவிறக்கம் செய்ய அம்மா கல்வியகம் இணையதளத்திற்குள் சென்று அங்கு தங்கள் பற்றிய விவரங்களை முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு பாடங்களை அவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ஜெ.தீபாவின் கணவர் மாதவன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தார். அவர் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, ஓராண்டை நிறைவு செய்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறவே வந்துள்ளேன் என்று தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்று விட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் அங்கு வந்த மாதவன் முதல் மாடிக்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. Source: Maalaimalar
0 notes
நீட் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு நீட் தேர்வுக்காக அரசு பயிற்சி மையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயிற்சி பெறும் 75 ஆயிரம் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த ஆண்டே இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 950 பேருக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம், பிளஸ் 2 மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் காமராஜர் பிறந்தநாளில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு முதல்முறையாக அரசின் கொள்கை முடிவாக இது வழங்கப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக அரசு, அரசு உதவி பெறும் மாணவர்கள் 100 பேரை தேர்வு செய்து மேலை நாடுகளுக்கு அனுப்பி அறிவியல், தொழிநுட்பம், கலை, இலக்கியம் போன்றவற்றை தெரிந்துகொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதில் முதன்முறையாக 100 மாணவர்களைத் தேர்வு செய்ய உள்ளோம். அதற்காக ரூ.3 கோடி ஒதுக்க உள்ளோம். ஜப்பான், சீனா, அமெரிக்கா, தென்கொரியா, ஜெர்மன், ரஷ்யா, இங்கிலாந்து பிரான்ஸ், நார்வே, ஸ்வீடன் செல்ல 4 குழுக்களை அனுப்ப உள்ளோம். குறிப்பிட்ட பாடத்தையே மாணவர்கள் படிக்கும் நிலையில் மாற்றி உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல் நிலை செல்லும் மாணவர்கள் ஒரே மாதிரி பாடங்களை படிக்கும் நிலை உள்ளது. மருத்துவம், பொறியியல்,விவசாயம், பல் மருத்துவம், கலை அறிவியல், இலக்கியம் போன்றவைகளைத்தான் படிக்கிறார்கள் அதை மாற்றும் வகையில் புதிய பாடங்களை கற்க புதிதாக எட்டுக்கு நான்கு என்கிற முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நீட் தேர்வுக்கு எந்த அளவில் வரவேற்பு உள்ளது என்பதை இரண்டு நாளில் தெரிவிக்கிறோம். தமிழகம் முழுதும் 100 மையங்களில் 75,000 மாணவர்கள் பதிவு செய்து பயிற்சி பெறுகின்றனர். சென்னையில் நான்கு மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்தாண்டு ஒரு லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்க முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம். அது வழங்கப்பட்ட பிறகு அடுத்தாண்டு அவர்கள் மத்திய அரசின் நீட் தேர்வை சிறப்பாக சந்திப்பார்கள். நீட் கோச்சிங் பயிற்சிக்கு பதிவு செய்து வரும் 75,000 மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்படும். அந்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அடுத்த ஆண்டு வழங்கப்படும் லேப்டாப்பை இந்த ஆண்டே வழங்க உள்ளோம். இதன் மூலம் அவர்கள் மத்திய அரசின் தேர்வை சிறப்பாக எதிர்கொள்வார்கள். பிளஸ் 2 முடித்தும் கல்லூரிக்குச் சென்ற மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க முடியவில்லை. அதற்குக் காரணம் லேப்டாப் தயாரிக்கும் ஒரு நிறுவனம் உயர் நீதிமன்றம் சென்றதால் பிரச்சினை ஏற்பட்டது. நல்ல நிறுவனத்தை ஆய்வு செய்து எல்காட் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம். அடுத்த ஆண்டு இது போன்ற பிரச்சினை வராது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். Source: The Hindu
0 notes
சென்னை டெம்ப்ஸ் அகாடமியில்நீட் தேர்வு பயிற்சி தொடக்கம்
சென்னையில் இயங்கி வரும் டெம்ஸ் அகாடமி நிறுவனம், பிளஸ் 2 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகளை தொடங்க உள்ளது. சென்னை அண்ணா நகரில் செயல்படும் டெம்ப்ஸ் அகாடமி, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனம் ஆகும். பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குப் பிறகு மருத்துவக் கல்வியில் சேர விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு இக் கல்வி…
View On WordPress
0 notes