அசையாமை
ஓடும் நீர் புரட்டி வந்த துகளாக
நெடுந்தூரமாய் நிற்காத பயணம்.
நீர் நில்லாத பயணி.
அதை நிற்கச்சொல்லிப்பார்த்தேன்
அழகிய வனங்களைப்பார்க்கும் போதெல்லாம்.
நீர் கண்பார்க்க முடியாத வேகவூர்தி.
ஆனால் காதும் கேட்கவில்லை போலும்.
கூட்டத்தைப்பார்த்து மிரண்டு ஓடும்
அரசுப்பேருந்தும் அடித்துக்கொண்டோடும்
நீர்ப்படலமும் ஒன்று.
இரண்டும் நிற்க
அணை போடவேண்டும்.
என்னைச்சுமந்து செல்லும் நதியின் பாதையில்
கரிகாலன் இல்லையோ?
கடலையே வந்தடைந்துவிடுவேன் போலும்.
இனிக்கடலில் தான் இளைப்பாறல்.
காலமெனும் நில்லா நதியும் நானும்!
அசையாமை ஆழத்தில் தான் கிடைக்குமா?
3 notes
·
View notes
ஒரு அமைதியான இரவில்..!
நீரோவின் பிடிலாய் எனது இரவுகள். விடியலின் துளிகள் சிறிதும் காட்டா மூடிய யன்னல்கள்.
முகம் பார்க்கும் கண்ணாடியில்தான் தெரிந்தது எனது மூக்குக் கண்ணாடியில் இருந்த கண்ணீர்க் கறைகள்.
போதை ஏறிய இரவொண்றில் கண்ணை மூடி முத்தமிடுகையில் உப்பும் கரித்தது.
"கண்ணீர் விடும் ஆண்களை பிடிக்காது" என்றாள். வார்த்தைகள் மின்னலாய் மின்னியது.
வேறு ஒரு இரவில் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் "கண்ணீர் மகிழ்விலும் உதிர்வதுண்டு"
பிதாவே தனது வார்த்தைகளில் கட்டுண்டார். எனக்கு நானே சுவாமிநாதனுமாய் ஆனேன்.
உன் செவ்விதழ்களில் உதிர்வது மட்டும் அல்ல, என் மனத் திரையிலும் பகலைப் போல உன்வார்த்தைகள்.
"நீ வியாபாரியானால், உனது செயல்களுக்கு நீயும் நன்றாக விலைபேசப்படுவாய்."
செயல்களைவிட வார்த்தைகளே பலமானது என்றார்கள். அது கனமானதும் கூட.
பகல் ஒரு பிரளயம் அது வார்தைகளால் நிகழ்கிறது. ஆனால் இரவுகளுக்கே காதுகள் உண்டு.
Ravin Thirugnanasampanthar
04:40
19.12.2021
0 notes
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
புறத்திணை சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டு தமயந்தி
- அப்துல் ரஹ்மான்
1 note
·
View note
சுவாதி அவர்களின் ஏக்கம் குறித்த கவிதை தவறாமல் பாருங்கள்.....
பிறருக்கு பகிரவும்....
1 note
·
View note
The Beauty Of Poetry In Tamil
Whether you’re from Tamil Nadu or not, chances are the beauty of Tamil songs has touched you. But in the midst of the catchy tunes, the rich world of Tamil poetry often goes unnoticed. Enter Orusaranam, a platform that invites you to explore the enchanting universe of Tamil literature, featuring contemporary poets and timeless verses from legends like பாரதியார்.
Orusaranam is more than just a website; it’s a welcoming space that introduces global audiences to the wonders of Tamil poetry. The platform acts as a stage for today’s poets to share their perspectives on life, love, and the human experience. It’s a celebration of voices that contribute to the ongoing story of Tamil literature.
The contemporary poets featured on Orusaranam bring emotions to life with their words, offering a fresh take on the world. The platform becomes a haven where their verses resonate with the shared language of human emotions. It’s about celebrating the modern voices that continue to shape Tamil literature. Orusaranam also pays tribute to the legacy of பாரதியார், a poet whose words have inspired generations. The platform’s curated collection of பாரதியார் கவிதை allows readers to immerse themselves in the timeless beauty and relevance of his verses.
But Orusaranam is not just about a poetry platform; it’s a gateway for those eager to explore the richness of the Tamil language. It’s about understanding the cultural nuances, the rhythm of the language, and the unique expressions that make Tamil poetry a treasure trove of literary artistry. In a world where cultural exchange is more important than ever, Orusaranam serves as a cultural ambassador, introducing a global audience to the soul-stirring beauty of Tamil poetry. So, whether you’re a seasoned Tamil literature enthusiast or a newcomer eager to discover the magic of கவிதைa, Orusaranam is your digital portal to a world where words dance to the beats of emotions, transcending borders and connecting hearts.
0 notes
https://youtube.com/shorts/Me1Ki7KiVmM?feature=share
0 notes
Feeling amma kavithai in tamil - அம்மா பாசம் கவிதைகள்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருப்பது மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள் , அம்மா பாசம் கவிதைகள், (feeling amma kavithai in tamil) பற்றி சிறந்த கவிதை என் தொகுப்புகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
அம்மா கவிதைகள் – feeling amma kavithai in tamil
Feeling amma kavithai in tamil – அம்மா பாசம் கவிதைகள்
ஆயிரம் பெண்களிடம் காதலை சொன்னேன் அவர்களும் திருப்பி என்னை காதலித்தார்கள் என் தாயின்…
View On WordPress
0 notes
கற்பனை ஒரு கிருக்கல் 4
இந்த உலகத்திற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சுவையாக வானத்தில் பறக்க ஆசைப்பட்டேன் ரோட்டில் ஓட ஆசைப்பட்டேன் புதுசா ஒன்றை கண்டுபிடிக்க ஆசைப்பட்டேன் வண்ணத்துப்பூச்சியின் பின்னே நடந்தேன் பலவண்ணத்துப் பூச்சியை கண்டேன் செய்தி எழுதுனேன் முதல் பக்கத்தில் விண்ணுக்கு சென்றாலும் அழைத்து செல்வேன் தரைக்கு வந்தாலும் அழைத்து வருவேன் மறுக்கா மறுக்கா சொல்லு முடியாது அபூர்வம் வண்ணத்துப்பூச்சியின் அழகினிலே இன்ப மகிழ்ச்சி வந்து பாயுது மனதினிலே ஓஹோ கவிதை சுட்ட கவிதை என்ன வண்ணத்துப்பூச்சிக்கு புரிஞ்சுதா உன் கவிதை சீக்கிரம் புரியும் எதோ ஒரு வார்த்தை என் மனதில் நினைக்க உலகம் பட்டாம்பூச்சியின் கூட்டை அழிக்க மனம்கதறினவனாய் மறுபடியும் செய்தி எழுதுனேன் முதல் பக்கத்தில் கட்டிடத்துக்காக வண்ணத்து பூச்சியின் கூட்டை அழித்தவர்களை நீங்கள் நலமா மறுபடியும் வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன் மனம் மயங்கினேன் திசை தெரியாமல் ஓடினேன் கற்பனையில் மிதந்தேன் வீட்டுக்குள் பட்டாம்பூச்சி உலகம் அமைத்தேன் உலகத்துக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன் மெல்ல மெல்ல நாட்கள் நகர்ந்தன பத்திரிகையின் முதல் பக்கத்தைவிட்டு வைத்துவிட்டேன் காலம்முழுவதும் பட்டாம்பூச்சிக்காக இயற்கையின் காவலன் இயற்கையின் நாயகன் இயற்கையை கவனி இயற்கையை ரசி போதும் போதும் பெருசா போகுது ஆஹா என்ன ஒரு அதிசய மனிதன் பாருங்கள்
கற்பனை ஒரு கிருக்கல் தொடரும்…
16 notes
·
View notes
கன்ன கதப்போரம் கதகதப்பான மூச்சு காற்று என்ன செய்யும்.. காதல் கொண்டவனின் கைகள் வரையும் கவிதை எல்லாம்.. ஆடையற்ற மேனி தாங்க ஆசை கொள்ளும்!! https://www.instagram.com/p/CmXBQhGMgpq3YFAlgirBccCuPWYuvjQEr0RMPc0/?igshid=NGJjMDIxMWI=
2 notes
·
View notes
கவிதை
கவிதை ஏதிற்பற்பின் ஏக்கம்,கவிதை ஆசையின் வடிவம்,கவிதை என்னங்கலின் உயிர்,கவிதை பொய்களின் கலஞ்சியம்.
View On WordPress
0 notes
பிறவிக்கவிஞர்
அதிபயங்கர அவசரத்திலும்
கவிதை ஒன்று தோன்றினால்
துண்டு சீட்டிலாவது
கவிதை எழுதிச்செல்லுவார்.
பளிச்சிடும் கடையிலே
மின்பலகை வரிசையில்
பிடித்த பலகை எடுத்ததும்
கவிதை ஒன்றை எழுதுவார்!
வாங்கும் நோக்கம் இல்லையாயினும்
அந்தக்கவிதையைப்படமெடுத்துப்பின்
வைத்துவிட்டுக்கிளம்புவார்!
நாளை அமர்ந்து நல்லதாய்
நேரம் ஒதுக்கி யாவையும்
புத்தகமாய் தொகுப்பேன்
ஜென் ஜீ கவிஞன் நானடா!
இதை நாளும் நாளும் சொல்லியே
நாட்கள் கடத்துவாரவர்!
நூறாண்டுகள் கழித்து வரும் தலைமுறை
மின்தகவல் குப்பை களைந்திட
தேட்டை போடும் நாளிலே
தமிழ்படித்த ஒருவன் இருந்திடக்கூடுமோ?
அவன் எடுத்து தொகுத்திட்டால்
வெளிவருமே இவன் கவிதையே!
பிரசுரம் என்பது பிரசவமல்ல!
தாயே பிரசவிக்காத குழவிகள்
ஆயிரமிங்குண்டு!
இவை பிரசவமாகாத பிறந்த குழவிகள்
இவற்றின் தாய்
நம் ஜென் ஜீ கவிராயன்.
இரகசியமான பிறவிக்கவிஞன்!
0 notes
அவள்
________
மை தீட்டிய விழிகளின் கடைக்கண் பார்வையில் மயங்கிக் கிடக்கிறேன்.
நீ என்னைப் பார்ததில்லை, ஆனால் உனது படம், அது ஓவியம். நிலவாய் என்னைத் தொடர்கிறது.
உனது பார்வையில் இருக்கும் சூட்சுமத்தையும், சேலையில் உன் கவர்ச்சியையும் நன்கு அறிந்தவள் நீ. ஆகவேதான் மீண்டும்மீண்டும் அவற்றை பலவண்ணங்களால் தீட்டிக்கொண்டிருக்கிறாய்.
என்னைப்போல் பல ஆண்கள் உன் பார்வையில் கிறங்கிக் கிடப்பார்கள். ஆனால் உன்னைப்போல், ஒரு பெண்ணும் என்னை இப்படி எண்ணங்களிலும் வர்ணங்களிலும் மிதக்கவைத்ததில்லை.
மாடத்திலும், அட்டில்கூடத்திலும் வாசனைகளைப்பரப்புகிறாய். கதவுநிலையோரத்தில் உன் கடைக்கண் பார்வையால் காதலை மொழிபெயர்ப்புச் செய்கிறாய்.
நீ போடும் தாமியில், உன் பின்னால் நான்வந்து அணைத்ததில்லை. ஆனால் அது நிகழ்கிறது. அக்கணமே எனைநோக்கி உன் தலைதிரும்பும். அதை முந்தி, உன் கடைவிழிகள் என் கண் நோக்கும்.
உனது உதடுகள் உனக்கு துரோகம் செய்வதை நீ அறிந்திருக்கிறாயா..? நீ ஒளித்துவைத்த புன்னகையை உன் கன்னங்கள் கூட காட்டிக்கொடுக்கின்றன.
நீ மாயக்காறி, வார்தைகளால் வித்தைகள் செய்பவள். என் தலைக்குள்ளே திரைப்படங்கள் ஓட்டுகிறாய்.
வியாபித்திருக்கும் பூவனத்தில், எனது கால் தடங்களை மின்னும் உன் புன்னகையால் தொலைத்துவிடுகிறேன்.
நீ எங்கெல்லாம் தொலைந்துபோவதாக சொல்கிறாயோ, நான் அங்கெல்லாம் உனது மொழிகளில் தொலைந்துபோகிறேன்.
(படம்: செயற்கை நுண்ணறிவால் உருவாக்கியது)
25.07.2020 ரவீன் திருஞானசம்பந்தர்
0 notes
காதல் நடந்து போகக்
காலடிச் சுவடுகளாய் நாம்
காலத்தின் கடற்கரையில்
*
மௌனப் பூவில் அமரும்
பட்டாம் பூச்சிகளைப் பிடிக்கச்
சொல் வலையோடு
அலைகிறேன்
*
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடி அலைகிறேன்
அப்துல் ரஹ்மானின் காதல் கஸலில் இருந்து...
1 note
·
View note
https://youtu.be/YThmMf7w0WI
எழுத்தாளர் கோ.ஒளிவண்ணன் அவர்களின் நேர்காணல் தவறாமல் பாருங்கள் ......
0 notes
🌍 WORLD POETRY DAY - 21 MARCH 2024 - உலக கவிதை தினம் - 21 மார்ச் 2024.
0 notes
ALP ஜோதிட வகுப்பின் நிகழ்வுகள் ! ஓர் கவிதை | ALP ASTROLOGY | #shorts
ALP Astrology
Dr.S.Pothuvudaimoorthy ALP Astrology Inventor
www.alpastrology.co.in
+91 8000 11 5656
ALP Astrology Course
ALP Astrology consultation
ALP Astrology Books
ALP Thirumana Porutham
0 notes