Love #tamil #kavidhai #kavithai #kavithaigal #tamilkavithaigal #tamilpoetry #tamilpoem #poemtamil #kavithaikal
2 notes
·
View notes
ஆனந்தப்பரவசம்! Rapture!
ஆனந்தப்பரவசம்! – Rapture!
View On WordPress
0 notes
'Chinnanchiru Kiliye Kannamma' by Subramania Bharati
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே (சின்னஞ்சிறு)
ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி
உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.
கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ.
உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங் கொட்டுதடி;
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!
0 notes
அடிமைத் தமிழா! அடிமைத் தமிழா!உன் பிள்ளை என்ன செய்தான்!ஆரியன் ஆண்டுக் கொழுத்தான்தெரிகிறது,திராவிடன் அண்டிக் கெடுத்தான்தெரிகிறது,தமிழா!நீ தூங்கவில்லைமயங்கிக் கிடக்கிறாய்,இந்தியம்,ஒற்றுமை, தேசபக்திஇதுஉனக்கு மட்டும் தானா!மாற்றான் ஆளநீமட்டும்சேவை செய்யும் சேவகனா?நீஅடிமையாகிவிட்டுப்போஉன்தலைமுறையைஅடிமைப்படுத்ததே!</br>-தமிழன் சங்கர்(4/28/2020)
1 note
·
View note
பாரதியின் வசனகவிதை: காற்று - 9
காற்றே, வா. மெதுவாக வா.
ஜன்னல் கதவை அடித்து உடைத்துவிடாதே.
காயிதங்களை யெல்லாம் எடுத்து விசிறி எறியாதே.
அலமாரிப் புத்தங்களைக் கீழே தள்ளிவிடாதே.
பார்த்தையா? இதோ, தள்ளிவிட்டாய்.
புத்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய்.
மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய்.
வலி யிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை
பார்ப்பதிலே நீ மஹா சமர்த்தன்.
நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை,
நொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர்,
நொய்ந்த உள்ளம் -- இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து
நொறுக்கிவிடுவான்.
சொன்னாலும் கேட்கமாட்டான்.
ஆதலால், மானிடரே வாருங்கள்.
வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்.
கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம்.
உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்.
உயிரை வலிமையுற நிறுத்துவோம்.
உள்ளத்தை உறுதிசெய்வோம்.
இங்ஙனம் செய்தால், காற்று நமக்குத்
தோழனாகிவிடுவான்.
காற்று மெலிய தீயை அவித்துவிடுவான்;
வலிய தீயை வளர்ப்பான்.
அவன் தோழமை நன்று.
அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.
0 notes
Tamil New Poetry| Tamil New Kavithai | Responsibilities of Parents
(via Tamil New Kavithai | Responsibilities of Parents)
0 notes
रुचि
‘रुचि’ – वैरमुत्तु
(कविता अंश; कविता संग्रह ‘बिंदु सिन्धु की ओर’ से)
रुकिए ज़रा!
बताइए तो-
‘हाँ’
या
‘नहीं’
हाड़ कँपाती सर्दी में
प्रातः पूस के महीने में
झरने के गुनगुने जल में
नहाया है एक बार भी कभी?
तांबूल रंजित
सांध्य गगन में
पंक्ति बाँधे बसेरे की ओर
उड़ते पंछियों के वितान को
आँखों से ओझल होने तक
अपलक नयनों से निहारा है कभी?
पूनम की धवल चंद्रिका जब
पानी पर लिखती प्रणय कहानी
उस आलोक-पथ को अवलोकते
चह…
View On WordPress
0 notes
இன்பக் கவி - இன்னுமொரு வரையறை
அழகு தமிழில் ஓர் கவிதை வேண்டும் அடுக்கடுக்காய் எதுகை மோனைதனை அவை ஏந்தி தவழ்தல் வேண்டும் இரு வரியில் முடிந்தாலும் இரு நூற்றைத் தொட்டு தொக்கி நின்றாலும் இரு இமைக் கொள்ளா உணர்ச்சிகள் இரு தயம் உணர்ந்திடல் வேண்டும் இன்பத்தின் எச்சங்களையும் இன்னல் தரு துன்பத்தின் உறுதியினையும் மனிதத்தின் மாண்புதனையும் மண்ணின் ஈரந் தனையும் எண்ணத்தின்…
View On WordPress
0 notes
I wrote this loooong back when I turned 20. Its feels weird when you come across old poems doesn’t it?
புவியின் மடியில்
பிறந்து இங்கு
வருடம் இருவது
வளர்ந்தேன் நானோ
பாசம் நேசம்
பகையும் கொஞ்சம்
ஓய்வும் நோய்வும்
ஒன்றெனும் வாழ்கை
மதியும் சுதியும்
மறந்திடத் தானோ?
இதயம் இழந்த
இளமைக் காலம்
அவர்தான் வருவார்
அவலம் நீக்க…
அமுதாய் இனிக்கும்
அவர்தரும் முத்தம்
கண்கள் மூட
காலம் நிற்கும்…
0 notes
தமிழில் மட்டும் தான் 'புருஷன்-பொண்டாட்டி' ,'கணவன்-மணைவி' க்கு முன்னாடி "வழித்துணை" என்ற வார்த்தை வந்திருக்க வேண்டும்.
#SanuRaj #PunidhaBharathi #Simplyctsk
2 notes
·
View notes
காவியத்தின் தலைவனே
கல்வாரி நாயகனே காருண்ய கரத்தினால் கரம் பிடித்த மன்னவனே கழுதையின் மேல் அமர்ந்து வந்த இஸ்ரவேலின் இரட்சகரே. உம் அன்பு என்னை தாங்குகின்றதே. கற்பாறையில் உதித்த பெரு வெள்ளமே காலை தோறும் உம் கிருபை புதிதாய் இருக்கிறதே. என் கண்கள் உம்மை காங்கின்றதே கலங்கரை விளக்கமும் கவிதையின் ஊற்றும் நீரே. கானமே அமுத கானமே காவியத்தின் தலைவனே கன்னி மரியாள் வயிற்றில் கனிவான செல்வமாய், யோசேப்பின் குமாரனாய் பிறந்த…
View On WordPress
0 notes
Minus Degree வெயில்
பெண்ணே,
உன்னை பார்க்கும் போதெல்லாம் வியர்க்குதடி.
நீ என்ன Minus Degree வெயிலா!
நீ பார்க்கும் போதெல்லாம்,
என் மேனி கூசுதடி,
நீ என்ன Tera Watts நிலவா!
என் காதல் சொல்ல விழையும் போதெல்லாம்,
என் நேரம் உறைந்து விடுகிறதோ?
உன் காதல் சொல்வாய் என நினையும் போதெல்லாம்,
உன் நேரம் விரைந்து ஓடுகிறதோ???
0 notes
ரோஜாவின் காதல்
உன் வீட்டு ரோஜா செடியும் என்னைப்போலவே தினம் ஒரு பூவை நீட்டி தன் காதலை சொல்கிறது நீ என் காதலி என்பதை அறியாமல்...!
12 notes
·
View notes
Smiling incomprehensibly / புரியாத புன்னகை
0 notes
நேர்மை
முயற்சி எனும் நிலத்தில்,
தோல்வி எனும் படிக்கட்டுகளை கொண்டு
மட்டுமே,
வெற்றி எனும் உயரத்தை தொட முடியும்.
குறுக்கு வழி எனும்
ஏணியை பயன்படுத்தினால்,
அது எப்பொழுது வேண்டுமானாலும்
சறுக்கி விடக்கூடும்.
0 notes