📰 நடராஜர் சிலை ஸ்ரீ நாராயணி பீடத்திற்கு வழங்கப்பட்டது
📰 நடராஜர் சிலை ஸ்ரீ நாராயணி பீடத்திற்கு வழங்கப்பட்டது
2010 ஆம் ஆண்டு சுவாமிமலைக்கு அருகில் உள்ள ஒரு யூனிட்டில் இதன் சிற்பம் தொடங்கியது
சுவாமிமலை அருகே உள்ள சிற்பப் பிரிவில், ஆறடி பீடத்தில் அமைக்கப்பட்ட 17 அடி உயர நடராஜர் சிலை, வேலூர் ஸ்ரீ நாராயணி பீட பிரதிநிதிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து திம்மக்குடியைச் சேர்ந்த சிற்பி வரதராஜ் கூறியதாவது: மிக உயரமான சோழர் கால மாதிரி நடராஜர் சிலை வடிக்கும் பணி, 2010ல் துவங்கி, இந்த ஆண்டு…
View On WordPress
0 notes
. கியான்வாபி மஸ்ஜிதை சீல் வைக்கும் வாரணாசி நீதிமன்ற உத்தரவை கண்டித்து #கள்ளக்குறிச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! உ.பி. வாரணாசியில் அமைந்துள்ள பழமையான கியான்வாபி மசூதியில், தொழுகைக்காக இஸ்லாமியர்கள் ஒளு எனும் அங்கசுத்தி செய்யும் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாக, மசூதியில் கள ஆய்வு செய்ய கோரி மனுத்தாக்கல் செய்த இந்துத்துவ அமைப்பை சேர்ந்த ஒருவரின் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ அப்பட்டமாக மீறும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் எனவும், மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு துணை போகாமல் சட்டத்தின் ஆட்சியை ஒன்றிய, மாநில அரசுகள் நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இன்று (மே.17) கள்ளக்குறிச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி நகர தலைவர் ஷேக் தலைமையில் நடைபெற்றது வரவேற்புரை தொகுதி பொருளாளர் நிஜாமுதீன் மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல்மாலிக் தொகுதி தலைவர் சையதுமுஸ்தாபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. மாவட்ட செயற்குழு உறுப்பினர் காதர் கண்டன உரை நிகழ்த்தினர்.. தொகுதி துணை செயலாளர்#சல்மான் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷாருக் பைசல் மற்றும் சலாவுதீன் கண்டன கோஷம் எழுப்பினர்.. இறுதியாக நன்றி உரை நகர துணை செயலாளர் சலீம் ஆற்றினார் இதில் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளும் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்... https://www.instagram.com/p/CdqrhKjPpxs/?igshid=NGJjMDIxMWI=
0 notes
கள்ளசாராயம் விற்ற பாஜக நிர்வாகி கைது
கள்ளச்சராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர், இதையடுத்து கள்ளச்சராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்,இந்த நிலையில் போலீசாரின் அதிரடி வேட்டையில் பாஜக OPC அணியின் தலைவர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் அவரிடம் 138 லிட்டர் மெத்தனால் கேன் சாராயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர்
அண்ணாமலை கள்ளச்சராயத்திற்கு எதிராக பேசி வரும் நிலையில் அவருடைய கட்சிக்காரே கைது செய்துள்ளது பாஜக இடையே சல சலப்பு ஏற்பட்டுள்ளது.
4 notes
·
View notes
அமைச்சரின் தம்பி என்ற கெத்தோடும், இளைமைத் திமிரோடும் சுற்றித்திரியும் சல...
0 notes
#காட்டுக்குள்_கரன்ஸி
ஆப் கி பார் சிங்கம் சர்க்கார் என முழங்கி காட்டில் ஆட்சியைப் பிடித்து இருந்த சிங்கராஜா ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகியிருந்தன, இந்த 8 ஆண்டில் ராஜா செல்லாத வெளிகாடுகளே இல்லை ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஏன் அண்டார்டிகா வரை எல்லா கண்டங்களிலும் உள்ள காடுகளுக்கு போய் விட்டு வந்திருந்தது அண்டார்டிகாவில் ஏது காடு? என மீடியாக்கள்..
கேள்வி கேட்ட போது காடில்லாத அந்த பனிப் பிரதேசத்தில் பெங்குவின், சீல், வால்ரஸ், பனிக்கரடிகள் எப்படி வாழ்கின்றன என பார்த்து வரவே அங்கு சென்றேன் எனக்கூறி அனைவரது வாயையும் அடைத்தது. சிங்கத்தின் நெருங்கிய நண்பரான கஜேந்திர அதானியும் (யானை) சீட்டா அம்பானியும் எல்லா பயணங்களிலும் உடன் சென்று ஆதாயம் அடைந்தது காட்டில் மற்ற மிருகங்களுக்கு அறவே பிடிக்கவில்லை.
மேலும் "ஸ்வச் கானகா" திட்டத்தில் காட்டை சுத்தமாக்குவேன் என்று கூறியது.. மேக் இன் ஃபாரஸ்ட் என முழங்கியது எல்லாம் காட்டு மாக்களை திருப்தி படுத்தவில்லை.! இந்நிலையில் பக்கத்து காடான பாகிஃபாரஸ்ட்டில் இருந்து வரும் ஊடுருவலை சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் முறியடிக்க அதில் கொஞ்சம் பாராட்டுகள் கிடைக்க இனி அதிரடி தான் என்னும் முடிவுக்கு வந்தது சிங்கம்.!
தற்செயலாக நாட்டிற்குள் வரும் புஷ்ப நாளிதழ் ஒன்று நாட்டில் பழைய கரன்சிகளை செல்லாததாக்கியதால் தான் எங்கும் கேஷ்லெஸ் எகானாமி வந்துவிட்டது என்று கம்பி கட்டியிருந்தது! இதைப் படித்ததும் சட்டென சிங்கத்திற்கு ஒரு ஐடியா பளிச்சிட்டது! ‘மனிதர்களுக்கு கேஷ்லெஸ் என்னும் போது மிருகங்களுக்கு ஏன் கரன்சி வரக்கூடாது’ இதைச் சொன்னதும் கஜேந்திராவும், சீட்டாவும் ஆஹா பிரமாதம் ஜி என்று ஜிங்ஜாக்கின.
அடுத்த நாள் கானகத்தின் தேசிய நாளிதழான தினக்காட்டு மலர் பத்திரிக்கையின் தலைப்பு செய்தி.."காட்டுக்குள் கரன்சி வருகிறது" வரும் ஜனவரி 31 க்குள் எல்லா மிருகங்களும் இனி காட்டில் கரன்சி வைத்து தான் எல்லா செலவுகளும் செய்ய வேண்டும் இதற்காக கானகமெங்கும் கேஷ் வெண்டிங் மெஷின்கள் (ஏடிஎம் போல) அமைக்கப்படும் என அரசர் சிங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! இதை படித்ததும் காடெங்கும் மிருகங்கள் சல சலத்தன.
காட்டுக்குள் கரன்சி புழக்கத்தில் வரும் என சிங்கராஜா அறிவித்து விட்டது. இதுவரை கரன்சியே வைத்து இருக்காத மிருகங்களுக்கு எந்த வகையில் கரன்சி அளிப்பது.. ஒரு மிருகத்துக்கு எவ்வளவு கரன்சி கொடுப்பது.. அதை வைத்து அவை என்னென்ன செய்யலாம் இதற்கு ஏதேனும் விதிகள்.. சட்டங்கள் உண்டா.? இது போன்ற டிரில்லியன் டாலர் கேள்விகள் எல்லா காட்டு மிருகங்களுக்குள் எழுந்தன.!
காட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களான கஜேந்திர அதானி, சீட்டா அம்பானி, நரி மல்லையா போன்றவர்களும் காட்டின் பிற பொருளாதார மேதைகளும், நிதி அமைச்சர் நீர்யானை தலைமையில் ஓன்று கூடினர்.. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் விதிகள் இதோ..
💵 காட்டுக் கரன்சியின் பெயர் ஜங்ளர் 💵
💵 ஒரு ஜங்ளர் இந்திய ரூபாய்க்கு 50 ரூபாய் மதிப்பு 💵
💵 ஒவ்வொரு விலங்கும் எவ்வளவு தாவர / மாமிச உணவுகள் ஒரு வேளைக்கு சாப்பிடுமோ அதன் எடைக்கு தகுந்தபடி 1கிலோ தாவர உணவுக்கு 5 ஜங்கிள் நோட் 1கிலோ மாமிச உணவுக்கு 10 ஜங்கிள் நோட் என விலை நிர்ணயித்து 3 வேளைக்கு எவ்வளவு வருகிறது என கணக்கிட்டு அந்தந்த மிருகங்களுக்கு ஏற்ப 1 மாதத்திற்கு தேவைப் படும் உணவுக்கான கரன்சி இலவசமாக முதலில் வழங்கப்படும்.💵
💵 மிருகங்கள் மேய்ச்சலுக்கு போகும் இடங்களிலும் வேட்டையாடும் பகுதிகளிலும் நீர் அருந்தும் கரைகளிலும் டோல்கேட் அமைக்கப்படும் அங்கு நுழையும் மிருகங்கள் உரிய கட்டணம் செலுத்திவிட்டுதான் நீர் அருந்தவோ,வேட்டைக்கோ மேய்ச்சலுக்கோ போக முடியும் 💵
💵 மாத பாஸ் செலுத்தியும் உணவு அருந்தலாம் ஒரே நாளில் மல்டி என்ட்ரி பாஸ் வசதியும் உண்டு 💵
💵 செலுத்தும் தொகைக்கு 20% சேவை வரி உண்டு! இந்த வரி வசூலித்து அந்த வரிப்பணத்தில் கானகமெங்கும் புல் விளைச்சல் புரதம் மிகுந்த மாமிசத்திற்கான விலங்குகள் வளர்த்தல் ஆகிய பணிகளுக்கு அரசு செலவிடும் 💵
💵 மாமிசம் சாப்பிடும் விலங்குகள் புல் மரம் வளர்க்கும் பணியிலும் தாவரம் சாப்பிடும் விலங்குகள் மாமிசத்திற்கான விலங்குகள் வளர்க்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படும்.. இவை இரண்டும் அரசுப் பணிகளாகும் அதற்கேற்ற ஊதியமும் உண்டு 💵
💵 காடுகள் முழுவதும் டோல்கேட் மற்றும் கேஷ் வெண்டிங் மிஷின்கள் வைக்கும் காண்டிராக்ட் கஜேந்திர அதானிக்கும் புல் வளர்ப்பு மாமிச விலங்குகள் வளர்ப்பு காண்டிராக்ட் சீட்டா அம்பானிக்கும்.. நீர் சப்ளை காண்டிராக்ட் நரி மல்லையாவுக்கும் வழங்கப்படும் 💵
💵 ஒழுங்காக ஜி.எஸ்.டி & வருமான வரி கட்டும் மிருகங்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் மற்றும் ஆஃபர் கூப்பன்கள் வழங்கப்படும். 💵
💵 கரன்சிகளை அச்சடிக்கும் உரிமை ரிசர்வ் பேங்க் ஆப் பாரஸ்ட்டுக்கு வழங்கப்படும் 💵
💵 அந்நியக் காடுகளிலிருந்து வரும் கரன்சி முதலீட்டுக்கும் சலுகைகள் உண்டு 💵
💵 வங்கிகளில் அதானி, அம்பானி, மல்லையாக்களுக்கு மிக மிக மிக தாராளமாகவும் சாதாரண விலங்குகளுக்கு கடும் கெடுபிடியுடனும் லோன்கள் வழங்கப்படும் 💵
💵 மிருகங்கள் அனைத்திற்கும் "காடார்" கார்டு வழங்கப்படும்.. இதற்கான டெண்டரும் அதானி குழுமத்திற்கே 💵
💵 விலங்குகளின் கால் நகங்கள் தோலில் உள்ள புள்ளிகள் வரிகள் பயோ மெட்ரிக் முறையில் சேமிக்கும் டெண்டர் அம்பானிக்கு 💵
💵 மாதந்தோறும் கரன்சி அப்டேட்டுகளை சிங்க ராஜா ஃபாரஸ்ட் எஃப் எம் 456.8 இல் சிங்கி பாத்தில் உரையாடுவார் 💵
💵 ஜங்கிள் நோட் ஆரஞ்சு, பச்சை, வெள்ளைக் கலரில் அச்சிடப்படும் 1 ரூபாய் முதல் அதிகபட்சம்100 ரூபாய் மதிப்பு வரை ஜங்கிள் நோட் வரும் 💵
அப்போது கரன்சியில் யார் படம் போடுவது என குழப்பம் வந்தது இந்த கொரில்லாவின் படம் போடலாமே என்ற குரல் கூரையிலிருந்து ஒலித்தது.. எல்லாரும் மேலே பார்க்க ரிசர்வ் பேங்க் ஆஃப் பாரஸ்ட்டின் கவர்னர் உராங் படேல் ஒருகையால் தொங்கிக் கொண்டே சொன்னார்.. மீண்டும் மிருகங்கள் மத்தியில் சலசலப்பு.. கவர்னர் உராங் படேல் காட்டுக் கரன்சியான ஜங்ளரில் கொரில்லா படம் போட வேண்டும் என்றதற்கு பலத்த எதிர்ப்பு..
உராங் படேல் ரிசர்வ் பேங்க் ஆஃப் ஃபாரஸ்ட்டின் கவர்னர் என்பதால் அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் உறவினர் படத்தை கரன்சியில் போட வேண்டும் எனச் சொல்வது மிகவும் கண்டிக்கத் தக்கது என பல மிருகங்கள் கண்டனக் குரல் எழுப்பின.அதற்கு பதில் நம் ராஜா படத்தையே கரன்சியில் போடலாமே என கொழுத்த காண்டிராக்ட் கிடைத்ததற்கு கூலியாய் பிளிறியது அதானி யானை.. கவர்னர் உராங் படேல் உட்பக்கமாக கையை வளைத்து விலாவை சொறிந்து கொண்டே சொன்னது..
நண்பர்களே நான் கரன்சியில் கொரில்லா படம் போடச்சொன்னது அவர் என் உறவினர் என்பதற்காக அல்ல மிருகங்களில் இருந்து பிறந்த மனித இனத்திற்கு
முன்னோடி என்பதாலும் நம் இனத்திலிருந்து உருவாகி ஆறாம் அறிவு பெற்றவன் மனிதன் என்பதை நினைவுறுத்தும் வகையிலும் தான் அதைச் சொன்னேன் என்றது..
நிதி நீர்யானை இப்போது பேசியது நண்பர்களே உராங்காரின் எண்ணத்தை சொல்லி விட்டார்., நான் என்ன நினைக்கிறேன் என்றால் மனிதர்கள் பல்வேறு நாடுகளில் உபயோகிக்கும் கரன்சியில் மிருகங்கள் படம் போட்டிருக்கிறார்கள். நாம் ஏன் நம் கரன்சியில் ஒரு மனிதனின் படத்தை போடக்கூடாது என்றது.. ஆஹா அற்புதமான யோசனை என கர்ஜித்தது சிங்கம்..
காட்டின் ராஜா சிங்கமே பாராட்டியபின் யாராவது மறுப்பு சொல்வார்களா என்ன.! அனைத்து மிருகங்களும் ராஜாவின் தேர்வு சூப்பர் என கோஷ்டி கானத்தில் ஒப்புதல் அளித்தது.. சரி யாருடைய படம் போடலாம் என கேட்க மகாத்மா காந்தி என்றது மான். ஆங்... ஏற்கனவே நாட்டுக்குள் போட்டாச்சு போட்டாச்சு என வடிவேலு பாணியில் புலி சொல்ல..
மண்டேலா என்றது கரடி சேகுவாரா என்றது சிறுத்தை நேதாஜி என்றது யானை இப்படி ஆளாளுக்கு ஒருவரின் பேர் சொல்ல கடைசியில் திருவுள சீட்டு போட்டுப் பார்க்க முடிவு செய்தன. அனைவரும் சொன்ன பேர்களை எழுதி சீட்டுக் குலுக்கி, ஒரு பஞ்சவர்ணக்கிளி வந்து சீட்டெடுக்க சீட்டில் யார் பெயர் வந்திருக்கிறது அதுவும் கானகத்தில் முதன் முதலில் வரப்போகும் கரன்சியில் இடம் பெறப் போகும்..
அந்த உன்னத மனிதர் யார் என அனைத்து மிருகங்களும் ஆவலுடனும் பரபரப்புடனும் காத்துக்கொண்டிருக்க சிங்கம் அந்த சீட்டை வாங்கி படித்துவிட்டு மெல்ல புன்னகைத்தபடி.. மாக்களே நம் காட்டுக் கரன்சியில் இடம் பெறப் போகும் அந்த நபர் யார் தெரியுமா.? சொல்லுங்கள் ராசாவே என அனைத்து மிருகங்களும் கோரஸாக கேட்க அந்த பெருமைக்குரிய நபர் இவர் தான் என்றது சிங்கம். ஆம் அவர் யார் என்பது தான் உங்களுக்குத் தெரியுமே!!
0 notes
கூடுதல் தளர்வுகள் கிடைக்குமா?: அரசின் முடிவுக்காக காத்திருக்கும் சிலை செய்யும் கலைஞர்கள்
கூடுதல் தளர்வுகள் கிடைக்குமா?: அரசின் முடிவுக்காக காத்திருக்கும் சிலை செய்யும் கலைஞர்கள்
[matched_content
Source link
View On WordPress
0 notes
ரியாவும், கங்கனாவும், பின்னே சில ப்ரைம் நியூஸ் சேனல்களின் தீர்ப்பும்!
ரியாவும், கங்கனாவும், பின்னே சில ப்ரைம் நியூஸ் சேனல்களின் தீர்ப்பும்!
[
சுஷாந்த் சிங்கின் தற்கொலை கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு பரிணாமங்களை எடுத்துள்ளது. வட இந்திய ஊடகங்களின் 24*7 ப்ரைம் டைம் கவரேஜ் இதற்குத் தரப்பட்டதில், சீன ஊடுருவல் பிரச்னை, ஜிடிபி வீழ்ச்சி, கொரோனா பாதிப்பு போன்ற செய்திகள் புறக்கணிப்பட்டன. 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் நடிகை ரேகாவுக்கு சூனியக்காரி, கொலையாளி எனப் பட்டம் கட்டிய வட இந்திய மீடியா, இம்முறை இலக்கு வைத்தது ரியா சக்ரபோர்த்திமீது!…
View On WordPress
0 notes
ஹோலி வண்ணங்களை பாதுகாப்பாக அகற்ற எளிய உதவிக்குறிப்புகள்: முகம் மற்றும் கூந்தலில் ஹோலி வண்ணங்களை அகற்ற சில எளிய வழிகள்!
ஹோலி வண்ணங்களை பாதுகாப்பாக அகற்ற எளிய உதவிக்குறிப்புகள்: முகம் மற்றும் கூந்தலில் ஹோலி வண்ணங்களை அகற்ற சில எளிய வழிகள்!
கூந்தலில் இருந்து ஹோலி நிறத்தை அகற்ற வழிகள்:
விளக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்
ஹோலி விளையாடுவதற்கு முன், விளக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை தலைமுடியில் தேய்க்கவும். இதனால் இந்த எண்ணெய் கூந்தலுக்கு ஒரு பாதுகாப்பு அடுக்காக இருக்கும். உங்களிடம் மண்ணெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இல்லையென்றால், அதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
முட்டையின் மஞ்சள் கரு அல்லது…
View On WordPress
0 notes
என்னுள் மய்யம் கொண்ட புயல் 👉 #KamalHaasan பணமதிப்பிழக்கத்தில் தான் பிடித்த முயலுக்கு 3 கால் தான் என அடம் பிடிக்காமல் தன் தவறை #பிரதமர் ஒப்புக் கொண்டால் என் #சலாம் அவருக்கு இருக்கிறது.
0 notes
கொளுத்தும் வெயில் கூடப் பார்க்காமல் கூடியக் கூட்டம் #சல்லிக்கட்டு (at V.o.c Park Coimbatore)
0 notes
📰 திருத்தணி கோவிலுக்கு புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது
திருத்தணி நகரை தவிர்த்து, சித்தூர் பகுதியில் இருந்து வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படும்
திருத்தணி நகரை தவிர்த்து, சித்தூர் பகுதியில் இருந்து வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படும்
திருத்தணி மலைக்கோவில் சுப்பிரமணியசுவாமி உச்சியில் இருந்து சித்தூர் சாலை வரை புதிய சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ஓரிரு வாரங்களில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1.95 கிமீ நீளமும், 3.75 மீ…
View On WordPress
0 notes
#சல்லிக்கட்டு #WeDoJallikattu
0 notes
ஜிரோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Ziro Travel guide - Places to Visit, things to do and how to reach
ஜிரோ சுற்றுலா – ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Ziro Travel guide – Places to Visit, things to do and how to reach
ஜிரோ என்ற அழ கான சிறிய மலை நகரம் அருணாச் சல பிர தேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன் றாகும். நெற் பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்து உள்ளது இந்த நகரம்..
Satyamon1993
இந்த வட்டார த்தில் பரவி கிடக் கும் பெரிய காடான இது பல பழங்குடியினருக் கும் வீடாக அமைந்திருக்கி றது. இந்த அழகிய நகரம் கடல் மட்டத்தி லிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு காணப்ப டும் பல வகையான தாவரங் களும்,…
View On WordPress
0 notes
Read this article it's very so interesting ஆலமரத்தில் குடிக்கொண்டருளும் ஸ்ரீ வநதுர்கை...!!! சபரிமலைக்கு சென்று வரும் வேலையில் நான் மறவாமல் மீண்டும் எருமேலிக்கு செல்வது வழக்கம்...!!! எருமேலிக்கு அருகே செருவள்ளி எஸ்டேட் உண்டு அங்கு ஐந்து அருவிகள் சங்கமிக்கும் ஒரு இடத்தில் தனியே ஒரு ஆலமரம் மட்டும் உள்ளது...!!! எத்தனை வெள்ளப்பெருக்கு காலத்தில் இம்மரம் மட்டும் அடித்துச் செல்லாமல் அந்த பாறையிலேயே தனித்து இருந்துள்ளது...!!! பல வருடங்களுக்கு முன்பு தேவ பிரசன்னம் பார்த்ததில் இவ்விடத்தில் தேவியின் சைதன்யம் நிறைந்து இருப்பதை ஜோதிஷ்யர்கள் அறிந்து கொண்டு அதற்கு பின் சிறியதாக எழுப்பிய இந்த தலத்திற்கு பெயர் தான் அஞ்சுக்குழி பராசக்தி ஆலயம்.. 🙏 முன்பொரு காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் சஞ்சரித்துக் கொண்டிருந்த பகுதிகளுள் இந்த அஞ்சுக்குழி யும் ஒன்று, இவ்விடத்தில் சங்கமிக்கும் தீர்த்தத்திற்கு பஞ்ச தீர்த்தம் என்று பெயர், பஞ்ச பாண்டவர்கள் வழிபாடு செய்யப்பெற்ற இந்த ஆலமரமே மூலவர், வெள்ளிக்கிழமைகள் தோறும் மாலை வேளைகளில் மட்டும் அம்மரத்திற்கு வனதுர்கை சங்கல்பத்தில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்...!!! அற்புதமான இறையுணர்வு மேலோங்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று...!!! சல சல என ஓடும் அருவி, பச்சை பசேலென அடர்ந்த மரங்கள், மாலை வேளைகளில் உடலுக்குள் ஊடுருவும் குளிர்ந்த காற்று, கண்களை மூடி சிறிது தியானிக்கையில் நமக்கு எதிரே தேவீ, மாலை மங்கும் வேளையில் அந்த பாறையில் முகலில் எங்கும் தீப ஒளி, முல்லைப்பூவுடன் பிரசாதமாக அளித்த அரைத்த சந்தன சாந்தின் வாடை நாசியை தொட்ட தருணத்தில், அந்த ஆலமரத்தில் குடிக்கொள்ளும் பர தேவதையை பிரத்யக்ஷமாக உணர்ந்த தருணம், 2016 ஆம் எனக்கு ஏற்பட்ட இந்த விநோத அநுபவத்திற்கு பிறகு தான் எப்போதும் சபரிமலை சென்றால���ம் திரும்பவும் எருமேலிக்கு அருகேயுள்ள இந்த அஞ்சுக்குழி பராசக்தியையும் தர்ஸனம் செய்வதை ஒரு தொடர் செயலாக வைத்துள்ளேன்...!!!#lightworker #hope #chakras #lawofattraction #universe #religion #pray #mind #meditate #positivevibes #guidance #trust #spiritualjourney #compassion #instagood #reiki #witch #grace #magic #calm #astrology #gratitude #thirdeye #chakra #goodvibes #witchesofinstagram #truth #india #positivity https://www.instagram.com/p/CCq7-nqJX-P/?igshid=y2h4xscrld2x
0 notes
“ஆப்பிள் பேபி4” (4நாள் தொடர்)
ஓ.கே ரவி நாம கல்யாணம் பண்ணிக்கிறது தான் சரின்னாலும் எனக்கு ஒரே ஒரு நாள் யோசிக்க டைம் கொடு என்று ஸ்ருதி சொன்ன போது, "என்ன ஆப்பிள் பேபியால் பிரச்சனையா? எனும் குரல் பின்னால் கேட்க திரும்பினார்கள். அவர்களது நண்பர்கள் மஞ்சுவும் ஹரியும் நின்றனர்!
ஹாய்! வாங்க அது எப்படி உங்களுக்கு? என்று ரவி கேட்க இப்ப தான் நாங்க வாங்கின ஆப்பிள் பேபியை வீட்டில் விட்டுட்டு வெளியே வர்றோம் என்றான் ஹரி. மம்மின்னு சொன்னவுடன் வாரி எடுத்து அணைத்தேன் என் உடல் சூடு பட்டதும் மம்மி நாளை மறுநாள் உன் ப்ரீயட்ஸ் பீகேர்ஃபுல்.!
என் ஹெல்த் ஆப்ஸ் மூலம் அறிந்தேன் என்கிறது குழந்தை" விசும்பினாள் மஞ்சு. டாடி நீ மீசை எடுத்தால் ஸ்மார்ட்டா இருப்பே என்கிறது இதெல்லாம் குழந்தைகள் பேசும் பேச்சா? இவர்கள் குழந்தை வடிவில் இருக்கும் அறிவாளிகள் இவர்களிடம் எப்படி குழந்தைத் தன்மையை எதிர்பார்ப்பது?
நாங்க திருமணம் செஞ்சுக்க போறோம் ரவி என்றான் ஹரி. நாங்களும் அந்த முடிவுதான் எடுப்பதாக உள்ளோம் ஆனால் ஸ்ருதி ஒருநாள் காத்திருக்கச் சொல்கிறாள். ஏன் ஸ்ருதி?மூன்று வருடங்கள் கூட ஆகாத நாங்களே திருமணம் செய்து கொள்ள இருக்கும் போது நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்?
மஞ்சு கேட்க இல்லை குழம்பிய மனநிலையில் நான் முடிவெடுப்பதில்லை என ஸ்ருதி சொன்னபோது சல சலவென சத்தம்.! அந்த பிளாட்டில் உள்ள ஏராளமானவர்கள் ஜோடி ஜோடியாக பார்க்குக்கு வந்து கொண்டிருந்தார்கள்!
"ஒரு பேபி உங்க வீட்டு CCTV யோடு என்னை Pair பண்ணுங்க நானே ஒரு நடமாடும் சிசிடிவி ஆகிடுவேன் எது தொலைஞ்சாலும் ஈசியா கண்டுபிடிக்கலாம்ன்னு சொல்லுது!
"அட ஏன் நீங்க தமிழ் லாங்வேஜ் ஃபேவரிட்டா வைக்கலன்னு கேக்குது! உங்க ஆபிஸ் வொர்க்கை சொல்லித் தந்தா அதை நான் பாத்துக்கிறேன்னு சொல்லுது! அனாசியாமா வீடியோ கேம்ஸ் ஆடுது! எல்லாரும் ஆப்பிள் பேபி வாங்கியவர்கள் எனத்தெரிந்தது!
அதில் பலர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருந்தனர், அப்போது வேகமாக கத்தியபடி வந்தான் ஒரு பிளாட்வாசி அரசாங்க டிவியில் பாருங்கள், டிவியை ஆன் செய்யுங்கள் என்றான் பூங்காவில் உள்ள டிவியை ஆன் செய்தார்கள்.
நாடெங்கும் இவர்களைப் போலவே பலர் ஸ்மார்ட் பேபிகளின் பேரறிவு பற்றி அங்கலாய்த்து பேட்டியளித்துக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சிக்கு நடுவே ஒரு விளம்பரம் வந்தது! ஆப்பிள் நிறுவனம் ஆர்வத்தில் அதீத திறன் படைத்த குழந்தைகளை படைத்து விட்டார்கள் அது தான் பிரச்சனை!
இனிக் கவலை வேண்டாம் எந்த வயது குழந்தை என சொல்லிவிட்டால் அந்த வயதிற்குரிய குழந்தைத்தனம் மாறாத குழந்தைகளைத் தயாரித்து அடுத்த மாதம் வெளியிட உள்ளோம் இந்த ஆப்பிள் குழந்தைகளை எக்சேஞ்ச் செய்து கொண்டு அவர்களை வாங்கிக் கொள்ளலாம் ஆப்பிள் செய்த தவறினை ஆண்ட்ராய்டு செய்யாது.!
அடுத்த மாதம் அறிமுகம் ஆண்ட்ராய்டு பேபிகள்.! சாக்லேட் கப் 520 வெர்ஷன் இந்த விளம்பரச் செய்தியைக் கேட்டு மக்கள் அனைவரும் கைத்தட்டினர் இப்போது ரவியை பார்த்து ஸ்ருதி சொன்னாள், "கல்யாணத்திற்கு நாம கொஞ்சம் வெயிட் பண்ணலாமே ரவி".!
நிறைந்தது.
0 notes
வலலபய படடல சல தறபப வ
வலலபய படடல சல தறபப வழ தமழக மதலவரகக அழபப
from இனியதமிழ் செய்திகள் https://www.pinterest.com/pin/630152172838741775/
0 notes